ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

மாட்டிறைச்சியும் - ஜாதி இந்துக்களும்


ரிக்வேதம் பசு புனிதமானது என்று கூறுகின்றது. புனிதமான படியால் யாகங்களில் அது வாளால் அல்லது கோடாலியால் வெட்டப்பட்டு கடவுள்களுக்கு நெய் வேத்தியமாக அளிக்கப் பட்டது. கடவுள் நெய்வேத்தியத்தைப் பிரசாதமாக பார்ப்பனர் களும் சரி, பார்ப்பனர் அல்லாத சாதி இந்துக்களும் சரி பக்தியுடன் சாப்பிட்டனர். இதை ‘தைத்திரிய பிராமணா’ என்ற வேத நூல் தெளிவாகக் கூறியுள்ளது. இது மட்டுமின்றி வீட்டிற்கு விருந்தாளி வந்தால் அவருக்கு ‘கோ உணவு’ அளிக்க வேண்டும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. அவ்வாறே விருந்தாளிகள் வேத காலங்களில் கௌரவப்படுத்தப்பட்டனர்.

ஆரியர்களின் ஆகப் பெரிய ரிஷியாகிய யாஜ்ஞவல்கியார் கூறுகிறார்.

“நான் அதைச்சாப்பிடுகிறேன். ஆனால் அது இளசாக இருக்க வேண்டும்"

இந்துக்கள் கோ மாமிசம் சாப்பிட்டு வந்ததை புத்த சூத்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. பசுக்களும் இதர பிராணிகளும் ஏராள மாகக் கொல்லப்பட்டன. இவை அனைத்தும் சமய சடங்குகளாக கருதப்பட்டன என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய இந்தியாவில் இந்துக்கள் மாமிச பட்சிணியாகவும், காய்கறி உணவு உண்பவர்களாகவும் பிரித்தால் மட்டும் போதாது. மாமிசம் உண்பவர்களை - மாட்டு மாமிசத்தைத் தவிர வேறு மாமி சங்களை உண்பவர்கள் என்றும், மாட்டு மாமிசம் உண்பவர்கள் என்றும் பிரிக்க வேண்டும். உணவு அடிப்படையில் - இந்துக்களைப் பிரித்தால் - பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், தீண்டப்படாதவர்கள் எனலாம். ஆனால் வேதங்கள் கூறும் நான்கு

வர்ணங்களுக்கு இது ஒத்து வராது.

எனினும் எதார்த்த நிலையை உண்மையில் எடுத்துக் காண்பிக்கின்றது.

ஒரு காலத்தில் எல்லோருமே மாட்டு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பார்ப்பனர் மாட்டு மாமிசம் உண்ணுவதை விட்டனர். பிறகு எந்த மாமிசமும் சாப்பிடுவதை விட்டு விட்டு, காய்கறி உணவு மட்டும் சாப்பிடத் தொடங்கினர். ஆனால் பார்ப்பனர் அல்லாதார் மாட்டு மாமிசம் சாப்பிடுவதை விட்டனரே தவிர, மீதியுள்ள மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர்.

அஸ்வமேத யாகம் போல், பசு யாகம் செய்த போதெல்லாம் பார்ப்பனர் அந்த மாமிசங்களைச் சாப்பிட்டு வந்தனர். உண்மை யில் ஏறத்தாழ தினசரி பார்ப்பனர் பசு மாமிசம் சாப்பிட்டு வந்தனர். பார்ப்பனர் "குருமார்கள்" ஆனபடியால், பார்ப்பனர் அல்லாதார் எல்லாச் சடங்குகளிலும் கலந்து கொள்ளும் பார்ப்பனர்களுக்கு தினசரி இலவசமாகவே மாட்டு மாமிசம் கிடைத்தது. இந்த வசதி பார்ப்பனர் அல்லாதாருக்குக் கிடைக்கவில்லை. உபநிஷத்துக்கள் கோ மாமிசம் சாப்பிடு வதை நியாயப்படுத்தின; கட்டாயப்படுத்தின. அப்படியானால் கோ மாமிசம் சாப்பிடுவதை பார்ப்பனர் எப்பொழுது கைவிட்டனர், ஏன் கைவிட்டனர் என்ற கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டும். புத்த மதத்திற்கும், பார்ப்பனீ யத்திற்கும் ஏறத்தாழ 400 ஆண்டுகள் கடுமையான சண்டைகள் நடைபெற்று வந்தன. புத்தமதம், மக்களை மிகவும் கவர்ந்தது. கடவுள் இல்லை என்பதும், பொருள் முதல் வாதமும், மக்களின் சமயமாக ஆயின. அசோக மன்னனே பவுத்தமதத்தைப் பெரிதும் ஆதரித்தவன். பார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற அசுர முயற்சி செய்து வந்தனர். பௌத்த மதம் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டதால், அதே வழியை பார்ப்பனர்களும் கடுமையாகப் பின்பற்றத் தொடங்கினர். இதன் நோக்கம் ஒன்றே - புத்தர் கோயில்களுக்குச் செல்லும் மக்களை தங்கள் கோயில்களுக்கு ஈர்க்க வேண்டும் என்பதே. இவ்வாறு தான் கோயில்கள் ஏற்பட்டன. பார்ப்பனீயத்தில் கோயில்கள் கிடையாது.

பவுத்தர்கள், பார்ப்பனர் சமயமுறையை எதிர்த்தனர். குறிப்பாக யாகத்தையும், யாகத்தில் குதிரை, பசு முதலியவற்றைக் கொல்வதையும் கடுமையாக எதிர்த்தனர். பசுக்கொலை எதிர்ப்பை பெருவாரியான சாதாரண மக்கள் பெரிதும் வரவேற் றனர். காரணம் விவசாயத்திற்கு மாடுகள் மிகத் தேவை யானதாலும், பெருவாரியான மக்கள் விவசாயிகளானபடியாலும், மாட்டைக் கொலை செய்வதை அவர்கள் விரும்பவில்லை. பார்ப்பனர்கள் மீது வெறுப்பு இவ்வாறு அந்தக் காலத்திலிருந்து தான் ஏற்பட்டது. இதைச் சமாளிக்கும் பொருட்டு பார்ப்பனர்கள் யாகத்தையும், பசுவை யாகத்தில் கொல்வதையும் கைவிட்டனர்.

இது மட்டுமின்றி பவுத்த பிக்குகள் செல்வாக்கிலிருந்து, மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கப் புலால் மறுத்து, எந்த மாமிசமும் திண்பவர்கள் அல்லர் என்றும், தாங்கள் காய்கறிதான் உண்பவர் கள் என்றும் வெளிப்படுத்தத் தொடங்கினர். இவ்வாறுதான் மாமிசப் பட்சிணியாக இருந்த பார்ப்பனர்கள் காய்கறி மட்டுமே தின்னும் சாகப்பட்சிணியாகத் தொடங்கினர்.

இது ஒரு புறமிருக்க, உடைந்த மனிதர்கள் கோ மாமிசம் தின்பது தீண்டாமைக்கு ஏன் இட்டுச் செல்ல வேண்டும்? பார்ப்பனர்களும், பார்ப்பனர் அல்லாதவர்களும், கோ மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்ட பின், உடைந்த மனிதர்கள் மட்டும் கோ மாமிசம் சாப்பிடுவது புதிய சூழ்நிலையை ஏற்படுத்தியது.

கோ மாமிசம் சாப்பிடாதவர்கள், பசு பவித்திரமானது அதைக் கொல்லக் கூடாது பசு மாமிசம் சாப்பிடுகிறவர்கள் சண்டாளர்கள் என்று கூறத் தொடங்கினர். ஆகவே, உடைந்த மனிதர்கள் கோ மாமிசம் சாப்பிட்டு வந்ததால் அவர்கள் சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டனர்.

ஆகவே, உடைந்த மனிதர்கள் கோ மாமிசம் சாப்பிட்டு வந்த காரணத்தால், தீண்டப்படாதவர்கள் என்ற நிலை ஏற்பட்டது என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

-விடுதலை ஞா.ம.1.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக