செவ்வாய், 21 நவம்பர், 2017

கார்த்திகை தீபத்தின் கதையளந்த கதை கேளீர்! (2)


- இரா.கண்ணிமை

நேற்றைய தொடர்ச்சி...

சைவசமய விளக்கத்தின்படி - பிறந்தவன் ஒருவன் - தன் பாவம் தீர்ந்து கைலாயம் சேர்ந்து முக்தியடைய - எண்பத்து நான்கு லட்சத்து யோனி வழியாய் - மாறி மாறிப் பிறந்து அப்பிறவிகளில் செய்யும் புண்ணிய பலத்தால் - இறுதியில் கைலாயம் சேர்வது உண்மையான முறை என்றால் - இதுவரை விளக்கிக் காட்டியுள்ளதில் - சிலவற்றைக் கொண்டு - மாபெரும் தீங்கினைச் செய்தோர் - மிகச் சுலபமான முறையை அனுசரித்து - கைலாயஞ் சேர்ந்தார்கள் என்று தெளிவாக கூறி இருப்பதால் - இவற்றில் எதைத்தான் - வேதாந்த விதிமுறை என்று நம்புவதென நீங்களே தீர்ப்பிடுங்கள்.

எண்பத்து நான்கு லட்சம் யோனியுள்ள உயிர்களில் - மனிதன் மட்டுமே தெய்வ நம்பிக்கையும், பயபக்தியும் நிறைந்தவனாகவும், இருக்கிறானாம். அப்பக்தியைப்பெற விதி பிரமாணங்களும் கைக்கொண்டு நடக்கவேண்டிய நியமங்களும் உண்டாம். ஆனால் இங்கு கா             ணும் விளக்க திருஷ்டாந்தங்களில் - சுவாமி பிரசாதத்தை திருடப் போனவன் - தனக்குப் போதுமான வெளிச்ச மில்லையென - விளக்குத்திரியைத் தூண்ட, சிவனுக்கும் வெளிச்சம் கிடைத்ததென்று சிவன் அவனை தனக்குத் தோழனும், அழகாபுரிக்கு அரசனும், திக்குப்பாலகரில் ஒருவனும் - குபேரனுமாக்கி - மேன்மைபடுத்தி முக்திய ளித்தது எத்தனை வீணான செயல்கள்?

அவ்வாறே ஆகாரம் தேடி பூமியைக் கிண்டிக் கிளரின எலிக்கும் முத்தி கிடைத்திருக்கிறதாம். தாமரை நூலால் திரியிட்டு, நெய் விளக்கேற்றுவோர்க்கு இறப்பு, பிறப்பு, இல்லாத முக்தி கிடைக்குமாம். நெய்யைத் திருடிக் குடிக்க வந்த எலி - மூவுலகையும் ஆளும் கக்கர வர்த்தியாக்கி - முக்தியும் பெற்றிருக்கிறது.

ஆனால் இதற்கு மூலகாரணமாய், நெய்விளக்கேற்றி வைத்த பக்தனுக்கு ஒரு வரமும் கொடுக்கவில்லை. எத்தனைபரிதாபம் பாருங்கள்! பாதகனான பிராமணனை (பார்ப்பனன்) புலி கொள்ள, அவன் மீண்டும் நரகத்தில் வதைபடுகையில் அவனது இடக்கால் எலும்பை கழுகு கவ்வித் தூக்கிக் காசிக்குக் கொண்டு போய் கங்கை நதியில் போட்டதால் - பிராமணன் நரகத்தை விட்டெ ழுந்து - புஷ்ப விமானத்திலேறி நாகலோகப்பதவி பெற்றான் என்பது - எப்படித் தோன்றுகிறது? இத்தனை விரைவில் முக்தி கிடைப்பது உண்மையானால் - மற்ற பூசைகள - பலிகள் எதற்கு? இவ்வகையில் முக்தி சேர முடியுமானால் - அவையொன்றும் அவசியமில்லையே! சிறு சிதம்பரமென்னும் விராடபுருடஸ்தல தரிசனை செய்வோர்க்கு - பிரம்மா, விஷ்ணு, காணா மோட்சம் கிடைக்குமாம். மும்மூர்த்திகளில் சிரேஷ்ட பதவி வகுத்து விதி எழுதும் பிர்மாவுக்கும், ரட்சிக்கும், விஷ்ணுவுக்கும் தெரியாத மோட்சம் எங்கேயிருக்கும்? சிந்தித்துப் பாருங்கள்!

விருத்தாசலத்தில் இறந்தோர் வீங்கி வெடிக்காது, பூச்சி, புழுசேராது நாற்றமின்றி செத்த பிணத்தின் வலச்செவியில் சிவன் வந்து பேசி காப்பாராம். செத்த பிணத்துடன் சிவன் பேசுவது உண்மையென்றால் - யாரோடு எப்படி பேசமுடியும்? அதற்கு உயிர் இல் லையே! இதுவல்லாது - சிதம்பர தரிசினையும், காசியில் இறப்பதும் - திருவாரூரில் பிறப்பதும் -  அருணாசலத்தை நினைப்பதும் - முக்தி தரும் என்பது முன்னுள்ள எல்லா வற்றிலும் மிக மிக சுலபமான வழியல்லவா? எங்கிருப் போரும் திருவாரூரில் போய் பிரசவித்து பிள்ளைகளைப் பெறுவதாலும், சிதம்பரத்தை தரிசிப்பதாலும், காசியில் போய் இறப்பதாலும் - அருணாசலத்தை நினைப்பதாலும் முக்தியடைந்துவிடலாமல்லவா? காலம் முழுதுமே பஞ்சமா பாதகங்களைச் செய்து கடைசியில் மேலே சொன்னபடி முக்தி பெற வழியுண்டென்றால் - பாவத்தை செய்வோரெல்லாம் புண்ணியம் செய்வோர் போலவே தங்களைத் திடப்படுத்திக் கொள்வார்களல்லவா?

இவ்வகையில் முக்தி பெறுவது முற்றும் சாத்திய மானதுதானா? தாயைப் புணர்ந்து, தந்தையைக் கொன் றோன், சகோதரனைக் கொன்றோன், தீர்த்தமாடி முக்தி சேர்ந்தான் என்றால் - இவ்வகையில் பாதகம் புரிவோரை - பின்னும் எவ்வளவு பலப்படுத்தி விடுகிறதென்று பாருங்கள். தாமிரவருணிமகத்துவ மகிமை - அதில் பத்து பணவிடை தண்ணீர் சாப்பிட்டால் சகல பாவங்களும் போய்விடுமென்றால் - அந்த ஆற்று நீரை பயன்படுத்தும் வாய்ப்புடையோர் அனைவரும் தாங்கள் செய்த பாவம் போக்கப்பட்டு நல்லவர்கள் போலவே காட்சியளிப் பார்கள் போல் தெரிகிறதே! இந்த நீர் கிடையாத எல் லையில் - இந்த நீரால் விளைந்த உணவு தானியங்களைப் புசிப்போர் பாவம் தீர்ந்து முக்தி பெறலாமென்பது - எத்தனை சுருக்கமான வழியென்று பாருங்கள்!

அந்த தானியங்களைப் புசிப்போர் நல்லவர்களாய் காண்பது மன்றி அவற்றை சேமித்து வைத்து பாதகர் களுக்கு பரிமாறி பாவங்களை களைந்து - சொர்க்கத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கலாமே! இவை அனைத்தும் பச்சைப் பொய்யும், தவறான நம்பிக்கையை ஊட்டும் - மாறாட்டமான வழியென்று இன்னும் உணர்வாரில் லையே! அப்படியே காவிரியாற்றுத் தீர்த்தமும் இக் கதையை நம்ப இடமளிக்கிறது. இவ்வாறே நாய்காலில் ஒட்டிய சாம்பல்  பிணத்தை மிதித்துக் கொண்ட கதையும். மோட்சத்திற்கு எவ்வளவு சுலபமான குறுக்கு வழி பாருங்கள். முக்திசேர விரும்புவோர்க்கு இவ்வழிகள் எவ்வளவு எளிதான வகையில் சேரும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதை பாருங்கள்.

இப்படியே நரகத்தில் வெந்து வேதனையை அனுப விப்போர் தன்மகன் மண்ணைச் சிவலிங்கமாய் கட்டி விளையாடியதால் நரகத்தை விட்டெழும்பி கைலாயம் போய் சேர்ந்தானென்பதும் மாபெரும் கேடான முறை யல்லவா?

தாமிரவருணி நீரில் குளித்தாலும், குடித்தாலும் அனைத்துப் பாவங்களும் தீரும் என்பதும், தண்ணீர் இல்லாத இடத்தில் இந்த நீரில் விளைந்த உணவுத் தானியங்களைச் சாப்பிட்டால் - சர்வ பாவங்களும் நீங்கும் என்பதும், கங்கை முதல் பதினொன்று நதிகளில் மூழ்கினால் பஞ்சமா பாதகங்களும் நீங்கி, முக்தி சேர் வார்களென்பதும் உண்மையானால் வேதம், சாத்திரம், புராண விசுவாசம் மற்றுள்ள சடங்குகள் அவசிய மில்லையே! பூசை, பலி, ஆலயம் தொழல் அவசிய மில்லையே! இவை அனைத்தும் வீண். வேத வழிபாடு களுக்குப் பொருந்தாத அஞ்ஞான செயல்கள், பொய் நம்பிக்கைகள் என்பதை ஞானிகள் விளக்கியுள்ளனர்.

அகப்பேய் சித்தர் பாடல்

தீர்த்தமாடினாலும் அகப்பேய் தீவினை போகாதே

ஊத்தை போனாலும் பேயுள்வினை போகாதே!

ஆறுகண்டாயே யகப்பேய் அந்தவினை தீர

தேரித் தெளிவதெல்லா மகப்பேய் தீர்த்தமாமாடியோ

காசிக்குப் போனாலு மகப்பேய் மந்துலையாதே

பூசித்து வந்தாலு மகப்பேய் புண்ணியங்கிட்டாதே!

சிவ வாக்கியர்

காணவேணுமென்று நீர்கடல் மலைகளேறுவீர்

ஆணவமதல்லவோ அறிவில்லாத மூடர்காள்

வேணுமென்றே ஈசர்பாத மெய்யுளே விளங்கினால்

காணலாகும் நாதனை கலந்துநின்ற ஜோதியை

தூர, தூர, தூரமென்று சொல்லியோடும் வீணரே

பாரும் விண்ணு மெங்குமாய் பரந்த மெய்பராபரம்

ஊருகாடு போயுழன்று நின்றுதேட வேண்டுமோ

நேரதாக உம்முனே நினைத்தறிந்து கொள்ளுமே!

பாம்பாட்டிச்சித்தர்

நாலுமீனை பலதரம் நல்ல தண்ணீரால்

நாளுங் கழுவினு மதன்நாற்றம் போமோ

கூறுமுடல் பலநதி யாடிக் கொண்டதால்

கொண்டமலம் நீங்காதென் றாடாய் பாம்பே!

வேறு விருத்தம்

ஒரு நாள் கடல்மூழ்கி உள்ளபாவமெல்லாம்

தீருமென்றால்

பல நாள் கடல் மூழ்கும் செம்படவர்க்கு

பாவமுண்டோ நயினாரே!

சிவ வாக்கியர்

காலை, மாலை நீரிலே முழுகுகின்ற மூடர்காள்

ஊழிகாலம் நீரிலே யுதிக்கும் தேரைக் கென்பலன்

காலமே யெழுந்திருந்து கண்கள் மூன்று தோன்றிலே

மூல, மூல மென்பீறாகில் முக்திசேர லாகுமே!

இப்பாடலின் கருத்தனைத்தும் இவ்வித நீராடல் - ஆலயம் வலம் வரல், புண்ய நதிகளில் மூழ்கி, பூசை, பலியிடல் யாவும் வீண் - வீண் என்று காட்டுகிறதே! மனிதன் முக்திபெற இதெல்லாம் தேவையில்லை. எதையும் ஆராய்ந்து மெய்யறிவை கடைபிடித்தலே நன்று. மேலும் அனைத்து பாவங்களுக்கும் அடிமைப் பட்டு - வெளிச்சடங்குகளான புண்ணியத் தீர்த்தமாடல் போன்ற நம்பிக்கையை அறவே வெறுத்துவிட்டு பொய்போதனைக்குச் செவி மடுக்காது நல்ல வழியைக் கடைப்பிடித்தலே நன்று என்னும் ஒரு மனப்பட்ட உள்ளத்தை வருவாக்குங்கள்.

கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே நாடெங்கிலு முள்ள சிவன் கோயில்களில் சிவபூஜை செய்வதும் - காடெல்லாம் - வீடெல்லாம் - காடை விளக்கேற்றுவதும் - வாடிக்கை - வேடிக்கை. குறிப்பாக அண்ணாமலையாருக் கும், உண்ணாமுலையாருக்கும் அரோகரா போட்டு மக்கள் மொட்டையடித்து - பட்டைபோட்டு திருவண் ணாமலையில் கிரிவலம் வருகிறார்கள். டன் கணக்கில் நெய்யை கொப்பரையில் ஊற்றி - மனிதசக்தியைக் கொண்டு மலைமேல் தீபம் ஏற்றுகிறார்கள்.

கார்த்திகையின் - கதையை - சிவபூஜைகளின் கதையை - அவர்கள் எழுதிவைத்தப்படியே சொல்லி விட்டோம். சிவனடியார்களே! என்ன சொல்லப் போகிறீர்கள்?

-விடுதலை,21.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக