செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

கும்பமேளா பெயரால் நிர்வாண சாமியார்கள்

ஹிந்து சன்னியாசிகள் கஞ்சா அடிப்பது பற்றி ’விஷயபாரதம் புலம்பல்’




உத்தரப்பிரதேச மாநில பாஜக சாமியார் ஆதித்யநாத் அரசு அலகாபாத் நகரை பிரயாக்ராஜ் என்று பெயர்மாற்றியுள்ளது. அந்நகரில் 2019ஆம் ஆண்டுக்கான கும்ப மேளா நடைபெறுகிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில் அந்நகருக்கு பிரதமர் மோடி சென்றார். அந்நகரிலுள்ள அக்ஷயாவாத் என்று அழைக்கப்படுகின்ற அரசு மரம் அமைந்துள்ள பகுதிக்கும் சென் றார். கும்பமேளா  கலை மற்றும் கட்டுப்பாட்டு மய்யத்தைத் தொடங்கிவைத்தார். தூய்மை கும்ப மேளாவுக்கான கண்காட்சியைப் பார் வையிட்டு கங்கை பூஜையிலும் கலந்து கொண்டார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் அலகாபாத் நகருக்கு பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றத் துக்கான பரிந்துரையை உத்தரப்பிரதேச மாநிலம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்த நிலையில், மத்திய அரசு அலகாபாத் நகரின் பெயரை பிரயாக்ராஜ் என்று பெயர்மாற்றம் செய்ய 2.1.2019 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

கும்பமேளாவையொட்டி, நாட்டின் பல் வேறு பகுதிகளிலிருந்தும் சாமியார்கள் பிர யாக்ராஜ் (அலகாபாத்) நகரில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

பாவங்கள் போக திரிவேணி சங்கமத்தில் ’புனித’ முழுக்காம்




கங்கையாறு யமுனை ஆறு மற்றும் கண் ணுக்கே புலப்படாத ஆறாக கூறப்படுகின்ற சரலசுவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் இணைகிற இடம் திரிவேணி சங்கமம் என்று குறிப்பிட்டு, அந்த பகுதியில் கும்ப மேளா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்கள், பெண்கள் என ஆயிரக் கணக்கிலான பக்தர்கள்  கும்பமேளாவில் பங்கேற்று, தங்களின் பாவங்கள் போகும் என்று நம்பி, திரிவேணி சங்கமத்தில் புனித முழுக்கு போடுவார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் 14ஆம் தேதியில் தொடங்கி மார்ச் மாதம் 3ஆம் நாள் வரை கும்ப மேளா எனும் மத அடிப்படையிலான விழா நடை பெறுகிறது.  நிர்வாண சாமியார்களே சிறப்பு அழைப்பாளர்கள்

கும்பமேளாவின் சிறப்பு அழைப்பாளர் களாக நாகா நிர்வாண  சாமியார்கள் கலந்து கொள்கிறார்கள்.

பெஷாவாய் எனப்படுகின்ற அரசு மரியாதையுடன்  அலகாபாத் நகருக்கு நாகா சாமியார்கள் ஊர்வலமாக  அழைத்து செல்லப்பட்டுள்ளனர். நாகா சாமியார்களின் சிறீ பஞ்சாயத்தி மகாநிர் வான் அகாரா அமைப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டது.

நாகா நிர்வாண சாமியார்கள் ராஜ மரியாதையுடன் கங்கையாறு மற்றும் யமுனை ஆறு கலக்கின்ற பகுதியாகிய சங்கம் பகுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

மத்தியிலும், உத்தரப்பிரதேச மாநி லத்திலும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பாஜக அரசு அமைந்துவிட்டதையடுத்து, ஆண்டுதோறும் கும்பமேளாவுக்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது

கும்பமேளாவையொட்டி அலகாபாத் நகரில் நிர்வாண சாமியார்கள் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசால்  ராஜமரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்முழுவதும் சாம்பலைப்பூசிக் கொண்டுள்ள நிர்வாண சாமியார்கள்  குதிரையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர். பெருங்கூட்டமாக வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். நிர்வாண சாமி யார்களாக இருந்தாலும், போதை பொருள்களை மிக வெளிப்படையாகவே பயன்படுத்தி வருகின்றனர். காட்டு மிராண்டி கால சாமியார்களாக இருந்த போதிலும், அவர்களிடத்திலும் திறன் பேசிகள் உள்ளன. அவர்களும் செல்ஃபி படங்கள் ஆங்காங்கே எடுத்துக் கொள் கின்றனர். நகரின் வீதியெங்கும் நிர்வாண சாமியார்கள் பெருங்கூச்சலுடன் எவ்வித கூச்சமுமில்லாமல் செல்லுகையில் அதைக் காணும் மக்கள் அருவருப்பு கொள்கின்றனர்.

அலகாபாத் நகரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் 15 ஆம் தேதியில் கும்பமேளாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு இடங்களிலிருந்தும் ஏராளமான வர்கள் செல்கின்றனர். அதற்கான ஏற்பாடு களை முழுவீச்சுடன் பாஜக அரசு செய்து வருகிறது. அரசே அதற்கான விளம்பர நடவடிக்கைகளை செய்து வருகிறது.

விஜய பாரதத்துக்கு வந்ததே கோபம்!


4.1.2019 நாளிட்ட விஜயபாரதம் கோபத்தில் பொங்கி ஒன்றை எழுதியுள்ளது. திரைப்பட இயக்குநர் ஆர்.ஜமீல் ஒரு திரைப்படத்தில் ஹிந்து சன்யாசி கஞ்சா புகைப்பிடிப்பது போல் காட்டப்பட்டு உள்ளதாம் - அது ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறதாம்!

வடநாட்டிலே ஹிந்து சாமியார்கள் கஞ்சா அடிப்பதில்லையா? எத்தனை படங் கள் போடட்டும்? இதோ எடுத்துக்காட்டுக்கு ஒன்று

- விடுதலை ஞாயிறு மலர், 12.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக