சனி, 24 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 12



(இராவணனை அடக்கி உட்கார வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வது போலக் கம்பர், நீதி தேவனைப் பார்க்கிறார். மேலும் இராவணன் பேசினால் விசுவாமித்திரன் ஏதேனும் விபரீதமாகச் செய்வார் என்று நீதிதேவனும் பயப்படுகிறார். எனவே, அன்றைய விசாரணையை அந்த அளவோடு நிறுத்திக் கொண்டு அறமன்றத்தைக் கலைக்கிறார்.)

(சபை கலைகிறது.)


காட்சி - 14


(மீண்டும் அறமன்றம் கூடுகிறது.)


இடம் : அறமன்றம். இருப்போர்: அறநெறி கூறுவோர் அறுவர், இலங் காதிபன், நீதிதேவன், கம்பர். (கம்பரும், நீதிதேவனும் வருகின்றனர். ஒருவருக் கொருவர் நமஸ்கரித்துக் கொள்கின்றனர். நீதிதேவன் அமர்ந்ததும் இலங்காதிபன் பேசுகிறான்.)

இராவணன்: (அறநெறி கூறுவோரை நோக்கி) நீதி தேவனுக்குத் துணை நிற்க வந்துள்ளோரே! அறவழி கண்டுரைக்கும் அறிஞரே! உமக்குச் சில சொற்கள். இரக்கமற்றவன் நான், எனவே அரக்கன்; இந்தக் கம்ப இலக்கணத்தை மறுக்கிறேன். கடமை, தவம், தொழில், வாழ்க்கைச் சிக்கல் முதலிய பல கொள்ள வேண்டிய போது, இரக்கம் காட்ட முடிவ தில்லை , முடியாது, கூடாது - இதற்கு ஆதாரங்கள் ஏராளம். மாசற்ற மனைவி மீது அவசியமற்றுச் சந்தேகிக் கிறான், கணவன். அதுவே அறமாகாது. இந்தக் கண வன் செயலிலேயே இறங்கி, தன் மனைவியைக் கொல்லும்படி கட்டளை பிறப்பிக்கிறான். அது கொடுமை அநீதி. (விசுவாமித்திரர், அப்போது பரசுராமனைக் கேலியாகப் பார்க்கிறார். பரசுராமர் தலை கவிழ்ந்து கொள்கிறார்.)

அக்கிரமம் அந்த அளவோடு நிற்கவில்லை. அறநெறி உணர்ந்தோரே! அநியாயமாகத் தன் மனைவியைக் கொல்லத் துணிந்த அந்தக் கணவன், தன் மகனையே ஏவினான் - தாயைக் கொல்லும்படி மகனை ஏவினான் - பெற்றெடுத்த தாயைக் கொல்லும்படி.

பரசுராமர்: (கோபத்துடன்) போதும் அந்தப் பழங்கதை. விசுவாமித்திரர்: (நீதிதேவனைப் பார்த்து சாந்தப் பாவனையில்) குற்றவாளிக் கூண்டிலே நிற்பவன், தன் முழுவாதத்தையும் கூற நாம் உரிமை தருவதே முறை - (பரசுராமனைப் பார்த்து) தடுக்க வேண்டாம். (இராவணனை நோக்கி) தாயைக் கொல்லத் தனயனை ஏவிய... கூறும், இலங்காதிபா! மேலும் கூறும். தாயைக் கொல்ல தனயனை ஏவிய... இராவணன்: தரும சொரூபி! இதோ இருக் கிறாரே (பரசுராமனைக்காட்டி) இவருடைய தகப் பனார் ஜமதக்னிதான்! அக்கிரமக்காரத் தந்தையின் ஆற்றலுள்ள மகன் இவர்! மகரிஷியே! தாயின் தலையை வெட்டினீரே தகப்பனாரின் கட்ட ளையைக் கேட்டு; அப்போது இரக்கம் எந்த லோகத்துக்குக் குடி ஏறிற்று? இரக்கமற்ற நான், அரக்கன்! அறநெறி காப்பாளார் இவர்! பரசுராமர்: (கோபமாக) துஷ்டத்தனமாகப் பேசும் உன் நாவை துண்டித்து விட எவ்வளவு நேரம் பிடிக்கும் (எழுந்து நின்று) எவ்வளவு திமிர்! மமதை! (நீதிதேவனைப் பார்த்து) நீதிதேவா! இராவணன்: (பரசுராமனைக் கேலியாகப் பார்த்தபடி) ஆமாம், தவசியாரே! நாக்கைத் துண்டித்து விடும், இல்லையானால் பலப்பல விஷயம் அம்பலத்துக்கு வந்துவிடும், பாசம், பந்தம் இவைகளை அறுத்துக் கொள்ள முடியா விட்டாலும், தவசிரேஷ்டர்களே உமக்கு, நாக் கறுக்க , மூக்கறுக்க நன்றாகத் தெரியுமே, செய்யும். (நீதிதேவன், எழுந்திருந்த பரசுராமரை, ஜாடை காட்டி உட்கார வைக்கிறார்.)

விசுவாமித்திரர்: (சமாதானப்படுத்தும் முறை யில்) பரசுராமரே! கோபம் கொள்ளாதீர். இராவணன் உம்மைக் குறை கூறுவதாக அர்த்தமில்லை. இரக்கம் காட்டாது இருந்தவர்கள் நான்  மட்டு மல்லாது, பல பேர் உண்டு, வேறு காரணத்துக்காக என்பதை விளக்கத்தான், தங்கள் தாயாரின் சிரத்தைத் தாங்கள் கொய்த கதையைக் கூறினார், என்று நினைக்கிறேன். பரசுராமர்: (ஆத்திரத்துடன் எழுந்து) ஓய், விசுவாமித்திரரே விசுவாமித்திரர்: பொறுமை, பொறுமை! நீதி தேவா! இவ்வளவு தொல்லையும் தங்களால் வந்தது. நீதிதேவன்: முனிபுங்கவரே! என் மீது என்ன தவறு? பரசுராமர், தன் தாயின் தலையை வெட்டியது, ஜமதக்னி கட்டளையால். இலங்கேசன், பரசுராமருக்கு இரக்கம் இல்லை என்று குற்றம் சாட்டினான்.

என் மீது மாசு இல்லையே! விசுவாமித்திரர் : உமக்குத் தெரியுமே! இரக்க மற்ற செயலைச் செய்தவர் இந்தப் பரசுராமர் என்று. அப்படி இருக்க, எப்படி அவரை அறநெறி காப்பவராகக் கொண்டீர்! தவறல்லவா அது? பரசுராமர்: (கோபமாக) ஓய் விசுவாமித்திரரே! உம்முடைய யோக்யதையை அறியாமல் என்னை நீதிதேவன் சபையிலே இழிவாகப் பேசிவிட்டீர்... விசுவாமித்திரர்: இழிவு ஏதும் பேசவில்லை. ஸ்வாமி! உண்மையை உரைத்தேன். பரசுராமர்: (ஆத்திரம் பொங்கி எழுந்து) நானும் கொஞ்சம் உண்மையை உரைக்கிறேன் கேளும். ஜடாமுடிதாரி ஒருவர், அய்ம்புலன்களை வென் றவர் - தேவரும் மூவரும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர வேண்டும், தம் எதிரே என்று ஆசை கொண்டு அகோரத்தவம் செய்தவர் - (அனைவரும் விசுவா மித்திரரைப் பார்க்கின்றனர்.) அப்படிப்பட்டவர் - கேவலம், ஒரு கூத்தாடிப் பெண்ணின் கோலா கலத்திலே மயங்கி, தவத்தை விட்டு அவளுடன்...

விசுவாமித்திரர்: மூவரும், மன்மத பாணத்தின் முன், அது போலப் பரிதவித்ததுண்டு, பரசுராமரே! மேன்கையின் மோகன ரூபத்திலே நான் இலயித் தது பெரிய குற்றமென்று கூறுகிறீர் - இது சகஜம்-

பரசுராமர்: (கேலியாக) மேனகையின் மோக னம்! (கோபம் கலந்து) வேத வேதாந்தத்தின் இரக சியத்தை அறிந்து ஜீவன் முக்தராக விளங்கிட வேண்டியவருக்கு, மேனகையின் விழியிலே வழியும் அழகு பற்றி என்னய்யா கவலை? (மற்ற வர்களை நோக்கி அவள் அதரம் துடித்தால் இந்த தபோதனரின் யாக யோகம் துடிக்க வேண் டுமா? தூங்க வேண்டுமா? - இதுவா யோக்யதை. (குரலை மெல்லியதாக்கி) ஆனால் நான் அதைக் கூடக் குற்ற மென்று கூறவில்லை . (சோகக் குரலில் மேனகை யுடன் குலவினீர். குழந்தை சாகுந்தலம் பிறந்தாள் - விழியிலே களிப்புடன், அந்தக் குழந்தையைக் கையிலேந்திக் கொண்டு, தேவ மாது மேனகை, உம் எதிரே வந்து நின்று, பிரியபதே! இதோ, நமது இன்பம்! நமது மகள்! என்று கூறி ஆதரவு கோரிய போது, (குரலை மெள்ள மெள்ள உயர்த்துகிறார்.) எவ ளுடன் கொஞ்சி விளையாடி பஞ்ச பாணனை வென்றீரோ, எவளுடைய அன்பைக் கோரிப் பெற்றீரோ, எவளுக்காக கனல் கிளம்பும் யாக குண்டத்தை விட்டு நீங்கி, புனல் விளையாட்டுக்குக் கிளம்பி, புளகாங்கித மடைந் தீரோ.

அந்த அழகு மேனகையை வெறுத்தீர், அழ வைத்தீர் - தவிக்கச் செய்தீர் - வேதனைப்படுத்தினீர் - குழந்தை சகுந் தலையை ஏற்றுக் கொள்ள மறுத்தீர் - கையாலே தொட மறுத்தீர் - கண்ணாலே பார்க்கவும் முடியாது என்றீர் - காதலுக்குத்தான் கட்டுப்படவில்லை - ஒழியட்டும் - காட்டுவாசத்தின் காரணமாக அந்தக் குணம் இல்லை என்று கூட விட்டு விடுவோம் - குழந்தை - சந்திரபிம்பம் போன்ற முகம் - பொன் விக்ரகம் - அந்தக் குழந்தை யின் முகத்திலே தவழ்ந்த அன்புக்காவது கட்டுப்பட்டீரா? ஓய்! புலியும் அதன் குட்டியை அன்புடன் நடத்துமே, புண்ணியத்தைத் தேடி அலையும் புருஷோத்தம னாகிய உமக்குத் துளி அன்பு இருந்ததா - குழந்தையிடம் - எவ்வளவு கல் மனம்? விசுவாமித்திரர்: பரசுராமரே! கோபத்தைக் கிளறாதீர்.

பரசுராமர்: எவ்வளவு இரக்கமற்ற நெஞ்சு - அரக்கர் கூடக் குழந்தைகளிடம் இரக்கம் காட்டத் தவறியதில்லை . உம்மைப் போல, பெற்ற குழந்தை யைத் தவிக்க விட்டு விட்டு பிரியத்துக்குரியவளைத் தேம்பச் செய்துவிட்டு, இரக்கத்தை மறந்து திரிந்தவர்களை, நான் இந்த ஈரேழு லோகத்திலும் கண்டதில்லை. விசுவாமித்திரர்: (கோபம் தலைக்கேறியவராய்) ஓய்! பரசுராமரே! அளவு மீறிப் போகிறீர்.

நீதிதேவன்: இருவருந்தான்! இலங்கேசன் பேச வேண்டிய நேரம் இது; உமக்குள் உள்ள தகராறு களைக் கிளறிக் கொள்ள அல்ல. இராவணன் : நான், அவர்களைக் குறை கூறவில்லை நீதிதேவா! இரக்கமற்ற செயலைச் செய்தவர்கள் அவர்கள், என்பதைக் காட்டுவது அவர்கள் மீது கோபித்து அல்ல ! அவர்களும் பாபம், நிலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் தானே; இரக்கம் கொள்ள முடியவில்லை. அவர்கள் எல்லாம் இரக்கமற்றவர், ஆகவே அரக்கர் என்று இந்தக் கம்பர், ஏன் குற்றம் சாட்டவில்லை ? இது என் கேள்வி! நான் இரக்கமற்றவன், ஆகவே அரக்கன் - எனவே நான் தண்டிக்கப்பட்டதும், என் அரசு அழிக்கப்பட்டதும், தர்ம சம்மதமான காரியம் என்று கவி பாடினாரே, அதற்குத்தான் இப்போது நான் மறுப்புரை கூறுகிறேன். இவர்கள் இரக்க மற்றவர்கள், மறுக்க முடியாது. ஏன் இரக்கமற்று இருந்தனர்.

- தொடரும்

- விடுதலை நாளேடு, 24.11.18

வியாழன், 22 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 9



இடம் : அறமன்றம்


இருப்போர்: நீதிதேவன், இராவணன், கம்பர், அக்னி தேவன்.


அக்னி: என்னை வேண்டி அழைத்தவர் களுக்குத் தரிசனம் தந்து பூஜித்தவர்களுக்கு வரம் அருளி இருக்கிறேன். இலங்கேசா! விண்ணும் மண்ணும் அறியும் என் மகிமையை - நீ அறிய மாட்டாய் - ஆணவம் உனக்கு...

இராவணன்: மகிமை...! வரம் அருளும் வல்லமை தங்கட்குக் கிடைத்தது; தங்களுக்கு இருக்கும் தேவ பதவியால்?

அக்னி: ஆமாம்.

இராவணன்: அந்தத் தேவ பதவி, மும்மலங் களை அடக்கி, பஞ்சேந்திரியங்களைக் கட்டுப் படுத்தித், தபோ பலம் பெற்று, புண்யத்தைப் பெற்றதால் தங்களுக்குக் கிடைத்தது.

அக்னி: வேறு எப்படிக் கிடைக்கும்? பஞ்சமா பாதகம் செய்து பெறுகிற பதவியா? தேவ பதவி?

இராவணன்: பஞ்சமா பாதகம், அரக்கர் செயல்! தேவர் உலகுக்கு பஞ்சமாபாதகம், நஞ்சு!

அக்னி; உண்மைதான்!

இராவணன்: அக்னி தேவனே! சப்த ரிஷிகள் உமக்குத் தெரியுமே?

அக்னி: தெரியும்.....

இராவணன்: ஏன் திகைப்பு! ஒரு முறை சப்தரிஷிகள் செய்த யாகத்திற்குச் சென்றிருந்தீரே, கவனமிருக்கிறதா?

அக்னி: போயிருந்தேன்.....

இராவணன்: தபோபலம் பெற்றவரே! தவசிகள் எழுவர் செய்த அந்த தனிச் சிறப்பான யாகத்துக்குச் சென்ற தாங்கள். ... என்ன செய்தீர்?

அக்னி: சென்றிருந்தேன் - அழைத்திருந்தனர்.

இராவணன்:  அழைக்காமலா செல்வீர்! தங்கள் மகிமையை அறிந்துதான் அழைத்தனர், அந்த மகரிஷிகள் - வரம் அருள வாரீர் என்றுதான் அழைத்தனர் - ஆனால் - அங்கு சென்று தாங்கள் செய்தது என்ன? அக்னி: ஆகுதி அளித்தனர்.... இராவணன்: அவர்கள் ஆகுதி அளித்தனர், அக்னிதேவனே! அவர்கள் அளித்தது ஆகுதி - தாங்கள் விரும்பியது என்ன?   அக்னி : நான்....

இராவணன்: தாங்கள் விரும்பியது என்ன? மும்மலங்களை  அடக்கிய மூர்த்தியே! விண்ணும் மண்ணும் போற்றும் தேவனே! அருள் வேண்டி அவர்கள் ஆகுதி அளித்தனர் - ஆனால் நீர்!... எதை விரும்பினீர்.... மனத் தூய்மையால் தேவ் பதவி பெற்றவரே! எதை விரும்பினர்... சொல்ல மாட்டீர்.. சப்தரிஷிகளின் பத்தினி மார்களை அல்லவா விரும்பினீர்....

யாகம் காணச் சென்றீர், மோகம் கொண்டு விட்டீர்!  யாகத்தில் ஈடுபட்டிருந்த சப்தரிஷிகள் மனைவிமார் மீது. . . இந்திரியங்களை அடக்கியதால் இந்தத் தேவ பதவி பெற்றீர் - உம்மை வணங்கி வரம் கேட்டனர் தவசிகள். நீரோ, காமம் கக்கும் கண்களுடன் ரிஷி பத்தினிகளைப் பார்த்தபடி நின்றீர்.

அவர்களைக் கற்பழிக்கத் திட்டமிட்டீர்... உண்டா ; இல்லையா?

அக்னி:  ஏதோ ஒரு வகையான மன மயக்கம்.

இராவணன்: உமக்கு! வரம் அருளப் போன இடத்திலே நீர் காமப் பேயானீர் - பெயரோ தேவன் - புகழோ அபாரம் - செயலோ, மிக மிக மட்ட ரகமானது... அக்னி தேவனே! யாகங்களை அழித்தனர் அரக்கர் என்கிறார்களே, அவர்கள் கூட அவ்வளவு ஈனத்தனமாக நடந்து கொண்ட தில்லை. நீதிதேவா! யாக குண்டங்களருகே இது போன்ற ஆபாசங்கள் அனந்தம் - யாகம் பகவத் ப்ரீதிக்கான காரியம் என்று வியாக்யானம் கூறுகிறார்! கம்பர்!

இந்த யாகங்களில் இலட்சணம் இப்படி இருக்கிறது! யாகங்களுக்குச் சென்று வரம் அருளப் போகும் தேவர்களின் செயல் இவ்விதம் இருக்கிறது...

அக்னி: மன மயக்கம் என்றுதான் கூறினேனே!

இராவணன்: உமக்கு மன மயக்கம் ஏற்படலாமா? யாக குண்டத்தருகே அமர்ந்திருந்த ரிஷி பத்தினிகளிடம் ஏற்பட்டதே மன மயக்கம் - கண்டித்தனரா - தண்டித்தனரா - தேவ பதவியை இழந்தீரா? - இல்லையே - காமாந்தகார சேட்டை புரிந்தீர் - புரிந்தும், அக்னி தேவனாகவே கொலு வீற்றிருக்கிறீர் - என்னையோ, இந்தக் கம்பர் அரக்கனாக்கினார் - என் ராஜ்யம் அழிந்தது தர்ம சம்மதம் என்று வாதாடுகிறார். நான் அரக்கன்! ஆனால் நான் செய்ததில்லை. தாங்கள் செய்யத் துணிந்த அக்கிரமத்தை. . .

ஆரியர்கள் செய்யும் யாகங்களைப் பற்றி, நான் எப்படி மதிப்பு கொள்ள முடியும்? இந்த யாகங்களில் பிரசன்னமாகும், அக்னி போன்ற தேவர்களிடம் நான் எப்படி மதிப்பு காட்ட முடியும்? ஆகவேதான், யாகங்களை அழித்தேன். ரிஷி பத்னிகளைக் கூடக் கற்பழிக்கத் துணியும் இந்தத் தேவர்கள், என்னை இழித்தும், பழித்தும் பேசலாமா? இவர்களின் அக்ரமத்தை அம்பலப்படுத்த யாரும் கிளம்பாத தாலேயே இவர்களுக்கும் - இவர்களின் புகழ் பாடிப் பூரிப்படையும் இந்தப் புலவருக்கும், என்னைக் கண்டிக்கத் துணிவு பிறந்தது...

.... கூப்பிடுங்கள் ஒவ்வொரு தேவனையும் - அவரவர்களின் அக்ரமச் செயலை, ஆதாரத்தோடு எடுத்துக் கூறுகிறேன் - மறுக்க முடிகிறதா இந்த மகானுபாவர்களால் என்று பார்ப்போம்.

(நீதிதேவன், கவலை கொண்டவராகி, சபையைக் கலைத்து விடுகிறார்.!

நீதிதேவன்: இன்று இவற்றுடன் நீதிமன்றம் கலைகிறது. பிறகு கூடுவோம்.

காட்சி - 9


(நீதிதேவனும், இராவணனும் வந்து கொண்டிருக்கின்றனர்)


இராவணன்: நீதிதேவா! இரக்கம் எனும் ஒரு பொருளிலா அரக்கன்; இது என் மீது சாட்டப் பட்டுள்ள குற்றச் சாட்டு. என் மீது மட்டுமல்ல, பலரால், பல பேர் மீதும் இக்குற்றச்சாட்டு, பல சமயங் களில் சமயத்திற் கேற்றாற்போல் சாட்டப்படுகிறது.

இரக்கம் இல்லையா? ஏனய்யா இவ்வளவு கல்மனம்? இரக்கம் கொள்ளாதவனும் மனிதனா? சர்வ சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள். ஆனால், பலரால் பல சமயங்களில் இரக்கத்தைக் கொள்ள முடிவதில்லை. ஏன் வாழ்க்கையின் அமைப்பு முறைதான் காரணம்.

நீதிதேவன்: என்ன! இரக்கம் கொள்ள முடியாததற்கு வாழ்க்கையின் அமைப்பு முறையா காரணம்?

இராவணன்: ஆம் நீதிதேவா! ஆம். நீதிதேவன்: விளங்க வில்லையே. தங்களின் வாதம்.

இராவணன்: விளங்காதது, என் வாதம் மட்டு மல்ல, நீதிதேவா! என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச் சாட்டும் கூடத்தான் விளங்கவில்லை. வாழ்க்கையின் அமைப்பு முறை. இரக்கத்தின் மன நிலைகளை மாற்றி விடுகிறது. இது என் வாதம். அது தங்களுக்கு விளங்கவில்லை. வாரும் என்னுடன்! என் வாதத் தின் விளக்கத்தினைக் காட்டுகிறேன். (புறப்படுதல்)

[காட்சி முடிவு


காட்சி - 10


இடம்: தேவலோகத்தில் ஒரு நந்தவனம். இருப்போர்: அகலிகை, தோழி, சீதை.


(அகலிகையும், தோழியும், பூப்பறித்துக் கொண்டே பேசுகிறார்கள்.)


அகலிகை: என்னதான் சொல்லடி, அவர் கருணாமூர்த்தி என்றால் கருணாமூர்த்திதான். என்னை என் கணவர், கல்லாகும்படி சாபம் இட்டு விட்டார் - கவனிப்பாரற்றுக் கிடந்தேனல்லவா - வெகு காலம் எவ்வளவோ உத்தமர்கள், தபோத னர்கள் அவ்வழிப் போய்க் கொண்டும், வந்து கொண்டுந்தான் இருந்தனர் - ஒருவர் மனதிலும் துளி இரக்கமும் உண்டாகவில்லை.

தோழி: கல் மனம் படைத்தவர்கள்.

அகலிகை: கனி வகைகளைக் கொடுத்திருப் பேன். அவர்களில் எவ்வளவோ பேருக்கு. காலைக் கழுவி, மலர்தூவி இருப்பேன் - ஒருவருக்கும் இரக்கம் எழவில்லை. கடைசியில் என் அய்யன் கோதண்டபாணி, மனதிலே இரக்கம் கொண்டு என்னைப் பழையபடி பெண் உருவாக்கினார் - என் கணவரையும் சமாதானப் படுத்தினார் - அவரு டைய இரக்கத்தால்தான் எனக்கு விமோசனம் கிடைத்தது.

(அகலிகை பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த சீதை)


சீதை: எவருடைய இரக்கத்தால்? (அகலிகை ஓடிவந்து சீதையின் பாதத்தில் மலர் தூவி, நமஸ்கரித்த பிறகு தோழியும் நமஸ்கரிக்கிறாள்.)

அகலிகை: அன்னையே! நமஸ்கரிக்கிறேன். தங்கள் நாதன், ஸ்ரீராமச்சந்திரருடைய கலியாண குணத்தைத்தான் கூறிக் கொண்டிருந்தேன். அவருடைய கருணையால்தான் இந்தப் பாவிக்கு, நற்கதி கிடைத்தது.

சீதை: அவரைத்தான் இரக்க மனமுள்ளவர் என்று புகழ்கிறாயா?

தொடரும்

- விடுதலை நாளேடு, 21.11.18

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 10



இடம்: தேவலோகத்தில் ஒரு நந்தவனம். இருப்போர்: அகலிகை, தோழி, சீதை,


(அகலிகையும், தோழியும், பூப்பறித்துக் கொண்டே பேசுகிறார்கள்.)


அகலிகை: ஆமாம். அம்மணி ஏன்?

சீதை: அவரையா! அடி பாவி! அவருக்கா இரக்க சுபாவம் என்று வாய் கூசாது கூறுகிறாய்.

அகலிகை: (திகைத்து) தாயே! என்ன வார்த்தை பேசுகிறீர்.

சீதை: பைத்தியக்காரி! இரக்க சுபாவமா அவருக்கு! என்னைக் காட்டுக்குத் துரத்தினாரே, கண்ணைக் கட்டி, அப்போது நான் எட்டு மாதமடி! முட்டாளே! கர்ப்பவதியாக இருந்த என்னைக் காட்டுக்கு விரட்டின கல் மனம் கொண்டவரை, இரக்கமுள்ளவர் என்று சொல்கிறாயே. எவனோ, எதற்காகவோ, என்னப் பற்றிப் பேசினதற்காக ஒரு குற்றமும் செய்யாத என்னை - தர்ம பத்தினி என்ற முறையிலே அவருடன் 14 வருஷம் வனவாசம் செய்த என்னை - ராவணனிடம் சிறை வாசம் அனுபவித்து அசோக வனத்திலே அழுது கிடந்த என்னை, கர்ப்பவதியாக இருக்கும்போது, காட்டுக்குத் துரத்திய காகுத்தனைக் கருணாமூர்த்தி என்று புகழ் கிறாயே! கல்லுருவிலிருந்து மறுபடியும் பெண் ஜென்மம் எடுத்தது இதற்காகவா? கடைசியிலும் என்னைச் சந்தேகித்து, பாதாளத்தில் அல்லவா புகவைத்தார். அப்படிப்பட்டவரை, அகல்யா! எப்படி யடி, இரக்கமுள்ளவர் என்று கூறுகிறாய், வில்வீரன் என்று புகழ்ந்து பேசு, சத்துரு சங்காரன் என்று பேசிச் சாமரம் வீசு, என்ன வேண்டுமானாலும் பேசு புகழ்ச்சியாக, ஆனால் இரக்க முள்ளவர் என்று - மட்டும் சொல்லாதே இனி ஒரு முறை - என் எதிரில். பிராணபதே! என்னைப் பாரும்! இந்த நிலையிலா, என்னைக் காட்டுக்குத் துரத்துகிறீர்? அய்யோ! நான் என்ன செய்தேன்? குடிசையிலே இருக்கும் பெண் களுக்குக் கூட, கர்ப்பகாலத்தில், சுகமாக இருக்க வழி செய் வார்களே! சக்கரவர்த்தியின் பட்ட மகிஷியான எனக்கு இந்தக் கதியா? நான் எப்படித் தாளுவேன். பிரியபதே! என்னைக் கவனிக்கா விட்டால் போகிறது, என் வயிற்றிலுள்ள சிசு - உமது குழந்தை - அதைக் கவனியும். அய்யோ! கர்ப்பவதிக்குக் காட்டு வாசமா? அய்யோ! உடலிலே வலிவுமில்லை- உள்ளமோ, துக்கத்தையோ, பயத்தையோ தாங்கும் நிலையிலே இல்லை. இந்த நிலையிலே என்னைக் காட்டுக்குத் துரத்துவது தர்மமா? நியாயமா? துளியாவது இரக்கம் காட்டக் கூடாதா? அழுத கண்களுடன் நின்று அவ்விதம் கேட்டேனடி - அகல்யா! என் நாதரிடம். அசோக வனத்திலே கூட அவ்வளவு அழுததில்லை.

அவனிடம் பேசினபோது கூட, என் குரலிலே அதிகாரம் தொனித்தது; மிரட்டினேன், இவரிடம் கெஞ்சினேன். ஒரு குற்றமும் செய்யாத நான் - இரக்கம் காட்டச் சொல்லி இரவிகுலச் சோமனைக் கேட்டேன்.

சீதா! நான் ராமன் மட்டுமல்ல ராஜாராமன்! - என்றார்.

ராஜாராமன் என்றால் மனைவியைக் காட்டுக்கு அனுப்புமளவு கல் நெஞ்சம் இருக்க வேண்டுமோ என்று கேட்டேன். அகல்யா! என் கண்ணீர் வழிந்து கன்னத்தில் புரண்டது. புயலில் சிக்கிய பூங்கொடி போல உடல் ஆடிற்று. என் நிலையை அந்த நேரத்தில் அரக்கனான இராவணன் கண்டிருந்தால் கூட உதவி செய்வானடி. ஆனால் நீ புகழ்ந்தாயே கருணாமூர்த்தி என்று, அவர், என் கண்ணீரைச் சட்டை செய்யவில்லை - நான் பதறினேன், கருணை காட்டவில்லை, காலில் வீழ்ந்தேன் - ஏதோ கடமை கடமை என்று கூறிவிட்டு, என்னைக் காட்டுக்குத் துரத்தினார். அப்படிப் பட்டவரை, தன் பிராண நாயகியிடம், ஒரு பாவமுமறியாத பேதையிடம், கர்ப்பவதியிடம், கடுகளவு இரக்கமும் காட்டாதவரை, அகல்யா! புத்தி கெட்டவளே! கூசாமல் கூறுகிறாய், இரக்கமுள்ளவரென்று. இனி ஒரு முறை கூறாதே; என் மனதை வேக வைக்காதே. (சீதை கோபமாகச் சென்று விட, அகல்யா திகைத்து நிற்கிறாள்.)

காட்சி முடிவு


காட்சி - 11


பாதை இராவணன், நீதிதேவன் வருதல்


இராவணன்: நீதிதேவா, போதுமல்லவா? இரக்கத்தின் பல வகை உருவங்கள் - விளைவுகள்.

நீதிதேவன்: என்னால் காணவும் சகிக்க முடிய வில்லை. காதால் கேட்கவும் முடியவில்லை. அன்னை ஜானகியே இவ்வளவு வேதனைப் படுகிறாரே, அய்யனின் இரக்கமிலா செயல் கண்டு.

இராவணன்: உண்மை அதுவாக இருக்கிறதே தேவா. இரக்கம் கொள்ளாதார் பலர் உளர். அது அவரவர்களுக்கு ஏற்பட்ட சூழ்நிலை. இரக்கம் உச்சரிப்பதற்கு எளிய பதம், இனிமையுங் கூட! வாழ்க்கையிலே இரக்கத்தைத் தேடிப் பயணம் நடத்துவதோ - அலைகடலிலே பாய்மரமற்ற கலம் செல்வது போலத்தான். வாருங்கள் போகலாம்.

(காட்சி முடிவு)


காட்சி - 12 நீதிதேவன் மாளிகை


நீதிதேவன் சோகமே உருவாக, சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார். அப்போது உள்ளே நுழைகிறான், பணியாள்.


பணியாள்: தேவா, பூலோகத்தில் தாங்கள் கண்ட காட்சிகளிலேயே, இன்னும் மனம் இலயத் திருக்கிறீரா? இல்லை, இலங்கேசன் தன்னுடைய அரக்கக் குணத்தை தங்களிடமும் காட்டி விட் டானா? கலக்கத்துக்கு என்ன சுவாமி காரணம்? இல்லை, என் காதில் பட்டவை : தங்கட்கும் எட்டி விட்டதா?

நீதிதேவன்: என்ன வரும்போதே, அடுக் கடுக்காக கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வருகிறாய்! எனது கலக்கம், நான் - பூலோகத்தில் கண்ட காட்சிகள்தான். இலங்கேசன் தன் வாதத் திற்கு, ஆதாரபூர்வமாக பூலோக. நடவடிக்கை களைக் காட்டினான். பூலோகம் என்ன? தேவ லோகத்திலும் சில காட்சிகளைக் கண்டேன். அவரவர்கள் ஏற்றிருக்கின்ற தொழில், வாழ்க்கை முறை, இலட்சியம் ஆகியவற்றால், இரக்கம் காட்ட முடியாத சந்தர்ப்பங்கள் பல நேரிடுகின்றன. இதை நினைத்தே கலக்கம் கொண்டேன். அது சரி, நீ ஏதோ காதில் பட்டது என்றாயே, என்ன சேதி காதில்பட்டது?

பணியாள்: சந்தேகிக்கிறார்கள். சுவாமி, தங் களை. அது மட்டுமல்ல, குற்றமே சாட்டுகிறார்கள், தங்கள் மீது.

நீதிதேவன்: (அலட்சியமாக) குற்றமா? என் மீதா? யார் அவர்கள்? பணியாள்: தேவர்கள் சுவாமி! தாங்கள் இராவணனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறீர் களாம். குற்றவாளியுடன் இவர் சுற்றக் காரணம் என்ன என்கிறார்கள். நீதிதேவன்: குற்றம் சாட்டப்பட்டவன், தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு, அநீதி, அக்ரமம், அநியாயம் என்பதை விளக்க ஆதாரங்களைக் காட்டினான். ஏன் அவனுடன் செல்லக் கூடாது? பணியாள்: இலங்கேசனுடன் தாங்கள் செல்வது, அவனிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தான் என்றும் தேவர்கள் பேசுகிறார்கள் சுவாமி. நீதிதேவன் : (கோபத்துடன்) எவரும், எவரைப் பற்றியும் எப்படியும்ஏசித் திரியும் மனோபாவம் பூலோகத்தில் தான் பெருகியிருக்கிறது, என்று எண் ணியிருந்தேன். எந்த விதமான பற்றோ, பாசமோ, கொள்கையோ, இலட்சியமோ, இல்லாதவர்களும் பாடுபடாமலேயே பலனை அனுபவிக்க வேண்டும் என்பவர்களும் மட்டுமே இதைப் போன்ற இழி வான காரியங்களைக் செய்து கொண்டிருப்பார்கள். இந்தப் புற்றுநோய் பூலோகத்தோடு நிற்காமல், தேவலோகத்தையும் பற்றிக் கொண்டது போலும். அவைகளை விட்டுத் தள்ளு. காதில் போட்டுக் கொள்ளாதே. அப்படியே விழுந்தாலும், மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே! தென்னிலங்கை இராவணன், தீர்ப்பைப் பற்றி, கவலையின்றியே இந்த விசாரணையில் கலந்து கொள்கிறேன், என்று சொல்லிவிட்ட பிறகு, அவன் எனக்கு இலஞ்சம் தர வேண்டிய அவசியம் ஏது?

(இப்போது, கம்பர் கோபமாக உள்ளே நுழைகிறார்.)


அவரைக் கண்டதும்


பணியாள்: இதோ, கவிச் சக்கரவர்த்தி அவர்களே வந்து விட்டார். கம்பர்:  நீதி தேவன் அவர்கள் ஏதோ அவசியத் தைப் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் இப்போது அவசியத்தோடுதான் வந்துள் ளேன். அவசியம் இல்லாமல் அந்த அரக்கனோடு, தாங்கள் பூலோகத்திற்குச் சென்று வருவதும், அவனோடு குலாவிக் கொண்டிருப்பதும் கேலிக் குரியதாக உள்ளது தேவா! இது அவசியம்தானா, என்று கேட்கிறேன்.

தொடரும்..

- விடுதலை நாளேடு, 22.11.18

புதன், 21 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 7



ஏடா! மூடா! விறைத்துப் பார்க்கிறாய் பதிலேதும் கூறாமல் உனக்கு மகன் இல்லையா - தவம் செய்து தலையைப் பறிகொடுத்த தனயனின், தாய் நான்! இந்த அநீதி, நடந்திருக்கிறது, அடவியில் அல்ல, அயோத்தியில்! களத்திலே அல்ல, தவத் தலத்திலேயே நடந்திருக்கிறது.

மகனே! கடவுளை உள்ளன்போடு எண்ணும்போது, கசிந்து கண்ணீர் மல்கும் என்று சொல்வாயே! இது, என்னடா மகனே! எனதருமை மகனே! - இரத்தமடா, இரத்தம், பெற்ற மனம் சும்மா இருக்குமடா, மகனே! எந்தப் பேயன் செய்தான் இந்தக் காரியம் -

அவனைக் காட்டுங்கள். சிரம் இருபது இருப்பினும், என் இருகரம் போதும், இரக்கமற்ற பேயன் யார்?

யார்? அவன் யார்? எங்கே? எங்கே இருக்கிறான்?

சீக்கிரம் அழைத்துச் செல்லுங்கள் - இன்னும் சில விநாடியே என் உயிர் இருக்கும் - அதற்குள் நான் அவனைக் காண வேண்டும் - அவன் என் கண்ணீரைக் காண வேண்டும்.

இதோ - இரத்தம் - மகனுடைய இரத்தம், தாயின் கரத்தில் -

ஈவு இரக்கமற்ற இந்தக் கொலைகாரனைக் காட்டுங்கள், அவன் உடலிலே, இந்த இரத்தத்தைப் பூசுகிறேன் - அதுபோதும், அவன் உயிர் போக -

(இராமன் அவ்வழி வர)

யார்? இராமனா! இராமன் அறிவானா, இதனை - இராமா! உன் ஆட்சியிலே, மகனின் வெட்டுண்ட தலை, தாயின் கையிலே! தவசியின் தலை! - சிலையா, நீ - சீற்றம் பிறக்கவில்லையா? - கண் திறந்துதானே இருக்கிறது - இதோ, என் மகன் தலை - மாபாவி யாரோ, கொன்றுவிட்டான் - பிடி - நீட்டு கரத்தை - என் உயிர் பிரியும் நேரம் இது - நீ தர்ம தேவன் - ராஜாராமன் - தவசிகளை ரட்சித்தவன் - தவசிகளை  இம்சித்த ராட்சதர்களைச் சம்ஹரித்த ஜெயராமன்! - இந்த அக்ரமத்துக்குத் தக்க தண்டனை தர, உன்னால் முடியும்! உன் கடமை அது! மகனை, மாபாவி கொன்று விட்டான் - மாதா வயிறெரிந்து கூறுகிறேன், பழிவாங்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன். - ராமா! நீ நல்லவன். சகலகலா வல்லவன். என் மகனைக் கொன்ற மாபாவியை, மண்டலத்திலே, எங்கு இருப்பினும், தேடிக் கண்டுபிடித்து, அவனுடைய ஈவு இரக்கமற்ற நெஞ்சைக் கூறு கூறாக்கிக் காக்கை கழுகுக்கு விருந்திடு. வேண்டாம்! அவைகளின் குணமும் மேலும் கெட்டு விடும் - மண்ணில் புதைத்து விடு. இராமா! என் கண்ணீர் என் மகனின் வெட்டுண்ட கழுத்திலிருந்து ஒழுகும் இரத்தம், இரண்டும், இதோ, உன் கரத்திலே, கலந்து குழைந்து இருக்கிறது! பழிக்குப் பழி! அக்கிரமக்காரனுக்குத் தக்க தண்டனை! இரக்க மற்றவனுக்கு ஏற்ற தண்டனை அளிக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது - என் மகன் தலை - உன் கையில் - நான், உன் காலடியில் -

(அவள் கீழே உயிரற்று வீழ்கிறாள். இதற்குள் பணியாட் கள் வந்து கூடுகின்றனர். கறைபட்ட இராமனின் கரத்தைக் கழுவ நீர் கொண்டு வந்து தருகின்றனர். கை கழுவிக் கொண்டே!)

இராமன்: இன்னும் கொஞ்சம் ஜலம், கழுவக் கழுவ... கறை போக காணோம்.

பட்டுத்துணி கொண்டு துடைத்தும் பயனில்லை. எடுத்துச் செல்லுங்கள்.

(தலையையும் தாயின் உடலையும் எடுத்துச் செல் கின்றனர். இராமன் அரண்மனை செல்கிறான்.)

காட்சி - 6


இடம்: தேவலோகம் அறமன்றம்


இருப்போர்: நீதிதேவன் இராவணன், கம்பன், அறநெறி கூறுவோர்.


(இராவணன் கெம்பீரமாக உலவிக் கொண்டு பேசுகிறான். நீதி தேவனின் முகத்திலே பயமும் சோகமும் நன்றாகப் படிந்திருந்தது. கம்பர் அறநெறி கூறுவோரைப் பார்த்துப் புன்னகை புரிகிறார். அவர்களின் முகத்தி லேயும் கவலைக் குறிகள் காணப்படுகின்றன..

இராவணன்: தேவா! பேசிய சாட்சிகள் - இங்கு வந்து பேசாத சாட்சிகளை விடக் குறைந்த அளவுதான் எண்ணிக்கையில். நான் மேலும் சாட்சிகளை அழைக்கப் போவதில்லை,

கம்பர்: (எழுந்து நின்று நீதிதேவனுக்கு மரியாதை தெரிவித்து விட்டு) உண்மைக்குச் சாட்சி தேவையில்லை - வைரத்துக்கு பளபளப்புத் தர வேண்டியதில்லை - அமிர்தத்துக்கு இனிப்புக் கூட்டத் தேவையில்லை - அழகுக்கு அலங்காரம் தேவை யில்லை -

இராவணன்: (கேலியாக) பாம்பின் பல்லுக்கு விஷம் தேவையில்லை - ஏராளம் அதனிடமே.

நீதிதேவன்: கம்பரே! உவமைப் பூங்காவில் உலாவ நேரம் இல்லை. என்ன உரைக்க எண்ணுகிறீர்?

கம்பர்: நான் என் வாதத்துக்குத் துணை தேட, சாட்சிகளை அழைக்கப் போவதில்லை, உண் மையின் உருவத்தைத் தெளிவுப்படுத்த, நீதிதேவ னின் திருச்சபையிலே அவசியமில்லை - தங்கள் திருப்பார்வைக்கு, உண்மை ஏற்கெனவே நன்கு தெரிந்தே இருக்குமாகையால்.

நீதிதேவன்: அதாவது சாட்சி இல்லை. கம்பர்: அவசியமில்லை . ..

நீதிதேவன்: அது நான் கவனித்துக் கொள்ள வேண்டிய விஷயம் - அவசியமா, அல்லவா என் பது - சாட்சி இல்லை என்று மட்டும் நீர் கூறலாம்.

கம்பர்: ஆமாம் நீதிதேவா! சாட்சி இல்லை - அதாவது .......

நீதிதேவன்: இலங்கேசன், பேசலாம்.

இராவணன்: வழக்கின் முடிவு பற்றிய கவலையற்றே நான் இதிலே கலந்து கொள்கிறேன் என்பதை முதலிலேயே கூறிவிட் டேன். காரணம் நீதிதேவனிடம் மதிப்புக் குறைவு அல்ல. நீதிதேவனும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட, ஏதோ ஒர் கட்டுத் திட்டத்துக்கு உட்பட்டே, வேலை செய்பவர். அவரிடம் உள்ள துலாக்கோல் அவர் செய்தது அல்ல! படிக்கற்கள் அவருக்குத் தரப்பட்டவை! இவைகளின் துணை கொண்டு நீதிதேவன், நிறை பார்க்கிறார், நான், அவருடைய நிறை பார்க்கும் குணத்தைச் சந்தேகிக்கவில்லை. அந்தத் துலாக் கோலையே சந்தேகிக் கிறேன். படிக்கற்களையே சந்தேகிக்கிறேன். எனக்குச் சாதக மான, தீர்ப்பு கிடைக்க வேண்டுமானால், நீதி தேவனின் உள்ளம் திருப்தியாவது மட்டும் போதாது - அவர் தம்மிடம் தரப்பட்டுள்ள துலாக் கோலையும், படிக்கற்களையும், தூக்கி எறிந்து விட்டு வழக்கின் சகல அம்சங்களையும் தாமாகச் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். இதற்கு நீதி தேவனுக்கு நல்லெண்ணம் இருந்தால் மட்டும் போதாது - உள்ளத்தில் உரம் வேண்டும்.

(நீதிதேவன், தலையைத் தொங்க விட்டுக் கொண்டி ருக்கக் கண்டு கம்பர் கோபமாக எழுந்து) கம்பர்: இலங்காதிபதி, வழக்கு மன்றத்தையே அவமதிக்கிறான் - அவமதிக்கிறார் -

இராவணன்: (கம்பரை நோக்கிக் கேலியாக) நான் கவியல்ல, குழைய, நெளிய! நான் இப்போது எடுத்துரைத்தது வாய்மை - என் அகராதிப்படி.

நீதிதேவன்: (தலையை நிமிர்த்தி இலங்கேச னைக் கெம்பீரமாகப் பார்த்து) இலங்காதிபனே! ஆளுக் கேற்றபடி, வேளைக்கேற்றபடி, வழக்குக் கேற்றபடி, துலாக்கோலையும், படிக்கற்களையும் மாற்றுவதும், புதுப்பிப்பதும் என்ற நிலை பிறந்தால், என்ன கதியாகும் நீதி?

இராவணன்: அதற்கு அஞ்சி, காலச் சுமை வீழ்ந்து, வீழ்ந்து சாய்ந்து போன துலாக் கோலில், தேய்ந்து போன படிக்கற்களைப் போட்டு, நிறை பார்ப்பது நீதியாகுமா, தேவா!

நீதிதேவன்: (சற்று கோபத்துடன்) சாய்ந்த தராசு! தேய்ந்த படிக்கற்கள்! முதன் முறையாக இம்மன்றத் தின் முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்,

இராவணன்: இதுதானே நீதிதேவா, முதல் புனர் விசாரணை! நான் பேசினேன் முதலில், பிறர் பிறகு பேசுவர். முடிவு என்ன? கவலை இல்லை! மறு விசாரணை வந்ததே அது போதும் தேவனே! மாசு நீதிமன்றத்துக்கும் உண்டு, அளிக்கப்பட்ட தீர்ப்பு களெல்லாம் மாற்ற முடியாதன அல்ல என்ற பல புது உண்மைகள் ஏற்பட்டு விட்டன அல்லவா, அது போதும், என் களிப்புக்குக் காரணம் அதுதான்.

(நீதிதேவன் எழுந்து கோபமாக) நீதிதேவன்: பிறகு கூடுவோம்.

காட்சி முடிவு

காட்சி -7


இடம்: வால்மீகி ஆசிரமம்


இருப்போர்: துரோணர், வால்மீகி


நிலைமை: வால்மீகி அமர்ந்து ஓலைச் சுவடி களைப் படித்துக் கொண்டிருக்கிறார். துரோணர் அப்போது அங்கு வருகிறார். துரோணர்: நமோ நமக! நமோ நமக!

வால்மீகி: நமோ நமக! நமோநமக! வாருங்கள்!  துரோணாச்சாரியார் அவர்களே! வாருங்கள், சகல கலா வல்லவராகியத் தாங்கள், இந்த ஆஸ்ரமத்துக்கு விஜயம் செய்ததால், நான் பாக்கியவானானேன்.

துரோணர்: நீங்கள் பாக்கியசாலிதான். ஆனால். . . வால்மீகி: என்ன முனிவரே! விசாரம்!

தொடரும்

- விடுதலை நாளேடு, 19.11.18