சனி, 24 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 12



(இராவணனை அடக்கி உட்கார வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வது போலக் கம்பர், நீதி தேவனைப் பார்க்கிறார். மேலும் இராவணன் பேசினால் விசுவாமித்திரன் ஏதேனும் விபரீதமாகச் செய்வார் என்று நீதிதேவனும் பயப்படுகிறார். எனவே, அன்றைய விசாரணையை அந்த அளவோடு நிறுத்திக் கொண்டு அறமன்றத்தைக் கலைக்கிறார்.)

(சபை கலைகிறது.)


காட்சி - 14


(மீண்டும் அறமன்றம் கூடுகிறது.)


இடம் : அறமன்றம். இருப்போர்: அறநெறி கூறுவோர் அறுவர், இலங் காதிபன், நீதிதேவன், கம்பர். (கம்பரும், நீதிதேவனும் வருகின்றனர். ஒருவருக் கொருவர் நமஸ்கரித்துக் கொள்கின்றனர். நீதிதேவன் அமர்ந்ததும் இலங்காதிபன் பேசுகிறான்.)

இராவணன்: (அறநெறி கூறுவோரை நோக்கி) நீதி தேவனுக்குத் துணை நிற்க வந்துள்ளோரே! அறவழி கண்டுரைக்கும் அறிஞரே! உமக்குச் சில சொற்கள். இரக்கமற்றவன் நான், எனவே அரக்கன்; இந்தக் கம்ப இலக்கணத்தை மறுக்கிறேன். கடமை, தவம், தொழில், வாழ்க்கைச் சிக்கல் முதலிய பல கொள்ள வேண்டிய போது, இரக்கம் காட்ட முடிவ தில்லை , முடியாது, கூடாது - இதற்கு ஆதாரங்கள் ஏராளம். மாசற்ற மனைவி மீது அவசியமற்றுச் சந்தேகிக் கிறான், கணவன். அதுவே அறமாகாது. இந்தக் கண வன் செயலிலேயே இறங்கி, தன் மனைவியைக் கொல்லும்படி கட்டளை பிறப்பிக்கிறான். அது கொடுமை அநீதி. (விசுவாமித்திரர், அப்போது பரசுராமனைக் கேலியாகப் பார்க்கிறார். பரசுராமர் தலை கவிழ்ந்து கொள்கிறார்.)

அக்கிரமம் அந்த அளவோடு நிற்கவில்லை. அறநெறி உணர்ந்தோரே! அநியாயமாகத் தன் மனைவியைக் கொல்லத் துணிந்த அந்தக் கணவன், தன் மகனையே ஏவினான் - தாயைக் கொல்லும்படி மகனை ஏவினான் - பெற்றெடுத்த தாயைக் கொல்லும்படி.

பரசுராமர்: (கோபத்துடன்) போதும் அந்தப் பழங்கதை. விசுவாமித்திரர்: (நீதிதேவனைப் பார்த்து சாந்தப் பாவனையில்) குற்றவாளிக் கூண்டிலே நிற்பவன், தன் முழுவாதத்தையும் கூற நாம் உரிமை தருவதே முறை - (பரசுராமனைப் பார்த்து) தடுக்க வேண்டாம். (இராவணனை நோக்கி) தாயைக் கொல்லத் தனயனை ஏவிய... கூறும், இலங்காதிபா! மேலும் கூறும். தாயைக் கொல்ல தனயனை ஏவிய... இராவணன்: தரும சொரூபி! இதோ இருக் கிறாரே (பரசுராமனைக்காட்டி) இவருடைய தகப் பனார் ஜமதக்னிதான்! அக்கிரமக்காரத் தந்தையின் ஆற்றலுள்ள மகன் இவர்! மகரிஷியே! தாயின் தலையை வெட்டினீரே தகப்பனாரின் கட்ட ளையைக் கேட்டு; அப்போது இரக்கம் எந்த லோகத்துக்குக் குடி ஏறிற்று? இரக்கமற்ற நான், அரக்கன்! அறநெறி காப்பாளார் இவர்! பரசுராமர்: (கோபமாக) துஷ்டத்தனமாகப் பேசும் உன் நாவை துண்டித்து விட எவ்வளவு நேரம் பிடிக்கும் (எழுந்து நின்று) எவ்வளவு திமிர்! மமதை! (நீதிதேவனைப் பார்த்து) நீதிதேவா! இராவணன்: (பரசுராமனைக் கேலியாகப் பார்த்தபடி) ஆமாம், தவசியாரே! நாக்கைத் துண்டித்து விடும், இல்லையானால் பலப்பல விஷயம் அம்பலத்துக்கு வந்துவிடும், பாசம், பந்தம் இவைகளை அறுத்துக் கொள்ள முடியா விட்டாலும், தவசிரேஷ்டர்களே உமக்கு, நாக் கறுக்க , மூக்கறுக்க நன்றாகத் தெரியுமே, செய்யும். (நீதிதேவன், எழுந்திருந்த பரசுராமரை, ஜாடை காட்டி உட்கார வைக்கிறார்.)

விசுவாமித்திரர்: (சமாதானப்படுத்தும் முறை யில்) பரசுராமரே! கோபம் கொள்ளாதீர். இராவணன் உம்மைக் குறை கூறுவதாக அர்த்தமில்லை. இரக்கம் காட்டாது இருந்தவர்கள் நான்  மட்டு மல்லாது, பல பேர் உண்டு, வேறு காரணத்துக்காக என்பதை விளக்கத்தான், தங்கள் தாயாரின் சிரத்தைத் தாங்கள் கொய்த கதையைக் கூறினார், என்று நினைக்கிறேன். பரசுராமர்: (ஆத்திரத்துடன் எழுந்து) ஓய், விசுவாமித்திரரே விசுவாமித்திரர்: பொறுமை, பொறுமை! நீதி தேவா! இவ்வளவு தொல்லையும் தங்களால் வந்தது. நீதிதேவன்: முனிபுங்கவரே! என் மீது என்ன தவறு? பரசுராமர், தன் தாயின் தலையை வெட்டியது, ஜமதக்னி கட்டளையால். இலங்கேசன், பரசுராமருக்கு இரக்கம் இல்லை என்று குற்றம் சாட்டினான்.

என் மீது மாசு இல்லையே! விசுவாமித்திரர் : உமக்குத் தெரியுமே! இரக்க மற்ற செயலைச் செய்தவர் இந்தப் பரசுராமர் என்று. அப்படி இருக்க, எப்படி அவரை அறநெறி காப்பவராகக் கொண்டீர்! தவறல்லவா அது? பரசுராமர்: (கோபமாக) ஓய் விசுவாமித்திரரே! உம்முடைய யோக்யதையை அறியாமல் என்னை நீதிதேவன் சபையிலே இழிவாகப் பேசிவிட்டீர்... விசுவாமித்திரர்: இழிவு ஏதும் பேசவில்லை. ஸ்வாமி! உண்மையை உரைத்தேன். பரசுராமர்: (ஆத்திரம் பொங்கி எழுந்து) நானும் கொஞ்சம் உண்மையை உரைக்கிறேன் கேளும். ஜடாமுடிதாரி ஒருவர், அய்ம்புலன்களை வென் றவர் - தேவரும் மூவரும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர வேண்டும், தம் எதிரே என்று ஆசை கொண்டு அகோரத்தவம் செய்தவர் - (அனைவரும் விசுவா மித்திரரைப் பார்க்கின்றனர்.) அப்படிப்பட்டவர் - கேவலம், ஒரு கூத்தாடிப் பெண்ணின் கோலா கலத்திலே மயங்கி, தவத்தை விட்டு அவளுடன்...

விசுவாமித்திரர்: மூவரும், மன்மத பாணத்தின் முன், அது போலப் பரிதவித்ததுண்டு, பரசுராமரே! மேன்கையின் மோகன ரூபத்திலே நான் இலயித் தது பெரிய குற்றமென்று கூறுகிறீர் - இது சகஜம்-

பரசுராமர்: (கேலியாக) மேனகையின் மோக னம்! (கோபம் கலந்து) வேத வேதாந்தத்தின் இரக சியத்தை அறிந்து ஜீவன் முக்தராக விளங்கிட வேண்டியவருக்கு, மேனகையின் விழியிலே வழியும் அழகு பற்றி என்னய்யா கவலை? (மற்ற வர்களை நோக்கி அவள் அதரம் துடித்தால் இந்த தபோதனரின் யாக யோகம் துடிக்க வேண் டுமா? தூங்க வேண்டுமா? - இதுவா யோக்யதை. (குரலை மெல்லியதாக்கி) ஆனால் நான் அதைக் கூடக் குற்ற மென்று கூறவில்லை . (சோகக் குரலில் மேனகை யுடன் குலவினீர். குழந்தை சாகுந்தலம் பிறந்தாள் - விழியிலே களிப்புடன், அந்தக் குழந்தையைக் கையிலேந்திக் கொண்டு, தேவ மாது மேனகை, உம் எதிரே வந்து நின்று, பிரியபதே! இதோ, நமது இன்பம்! நமது மகள்! என்று கூறி ஆதரவு கோரிய போது, (குரலை மெள்ள மெள்ள உயர்த்துகிறார்.) எவ ளுடன் கொஞ்சி விளையாடி பஞ்ச பாணனை வென்றீரோ, எவளுடைய அன்பைக் கோரிப் பெற்றீரோ, எவளுக்காக கனல் கிளம்பும் யாக குண்டத்தை விட்டு நீங்கி, புனல் விளையாட்டுக்குக் கிளம்பி, புளகாங்கித மடைந் தீரோ.

அந்த அழகு மேனகையை வெறுத்தீர், அழ வைத்தீர் - தவிக்கச் செய்தீர் - வேதனைப்படுத்தினீர் - குழந்தை சகுந் தலையை ஏற்றுக் கொள்ள மறுத்தீர் - கையாலே தொட மறுத்தீர் - கண்ணாலே பார்க்கவும் முடியாது என்றீர் - காதலுக்குத்தான் கட்டுப்படவில்லை - ஒழியட்டும் - காட்டுவாசத்தின் காரணமாக அந்தக் குணம் இல்லை என்று கூட விட்டு விடுவோம் - குழந்தை - சந்திரபிம்பம் போன்ற முகம் - பொன் விக்ரகம் - அந்தக் குழந்தை யின் முகத்திலே தவழ்ந்த அன்புக்காவது கட்டுப்பட்டீரா? ஓய்! புலியும் அதன் குட்டியை அன்புடன் நடத்துமே, புண்ணியத்தைத் தேடி அலையும் புருஷோத்தம னாகிய உமக்குத் துளி அன்பு இருந்ததா - குழந்தையிடம் - எவ்வளவு கல் மனம்? விசுவாமித்திரர்: பரசுராமரே! கோபத்தைக் கிளறாதீர்.

பரசுராமர்: எவ்வளவு இரக்கமற்ற நெஞ்சு - அரக்கர் கூடக் குழந்தைகளிடம் இரக்கம் காட்டத் தவறியதில்லை . உம்மைப் போல, பெற்ற குழந்தை யைத் தவிக்க விட்டு விட்டு பிரியத்துக்குரியவளைத் தேம்பச் செய்துவிட்டு, இரக்கத்தை மறந்து திரிந்தவர்களை, நான் இந்த ஈரேழு லோகத்திலும் கண்டதில்லை. விசுவாமித்திரர்: (கோபம் தலைக்கேறியவராய்) ஓய்! பரசுராமரே! அளவு மீறிப் போகிறீர்.

நீதிதேவன்: இருவருந்தான்! இலங்கேசன் பேச வேண்டிய நேரம் இது; உமக்குள் உள்ள தகராறு களைக் கிளறிக் கொள்ள அல்ல. இராவணன் : நான், அவர்களைக் குறை கூறவில்லை நீதிதேவா! இரக்கமற்ற செயலைச் செய்தவர்கள் அவர்கள், என்பதைக் காட்டுவது அவர்கள் மீது கோபித்து அல்ல ! அவர்களும் பாபம், நிலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் தானே; இரக்கம் கொள்ள முடியவில்லை. அவர்கள் எல்லாம் இரக்கமற்றவர், ஆகவே அரக்கர் என்று இந்தக் கம்பர், ஏன் குற்றம் சாட்டவில்லை ? இது என் கேள்வி! நான் இரக்கமற்றவன், ஆகவே அரக்கன் - எனவே நான் தண்டிக்கப்பட்டதும், என் அரசு அழிக்கப்பட்டதும், தர்ம சம்மதமான காரியம் என்று கவி பாடினாரே, அதற்குத்தான் இப்போது நான் மறுப்புரை கூறுகிறேன். இவர்கள் இரக்க மற்றவர்கள், மறுக்க முடியாது. ஏன் இரக்கமற்று இருந்தனர்.

- தொடரும்

- விடுதலை நாளேடு, 24.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக