திங்கள், 30 மே, 2016

திரிமூர்த்திகள் என்ற பெயரே புராணப் புரட்டு

(சித்தாக்காடு கே.ராமையா)

22.9.1929 குடிஅரசிலிருந்து...
சிவ மதஸ்தர் சிவனையும், விஷ்ணு மதஸ்தர் விஷ்ணு வையும், ஸ்மார்த்தர்கள் பிரம்மாவையும் வழிபடுவதின் மூலம் ஏற்படும் சமயக்குறிச் சண்டைகள் நீதிமன்றம் வரை நிகழ்ந்தாலும், மேற்படி மூன்று கடவுளின் பெயரால் கொள் ளை கொண்டு வரும் ஒரு சாரார், தங்கள் சுயநலத்திற்கு ஆதரவாகவும், சண்டையிட்டுக் கொள்ளுகிறவர்களுக்குச் சாந்தியாகவும் இம்மூன்று பெயரைக்கொண்ட கடவுள்களும் ஒருவரே என்று தத்துவார்த்தம் புரித்துகொண்டு மக்களை பாழ்படுத்தி வருகிறார்கள்.
என்ன தத்துவார்த்ததும் புரிந்தாலும் திரிமூர்த்தி என்ற பெயர் பாமர மக்களை ஏமாற்ற படித்த கூட்டத்தார் தங்கள் தங்கள் மனோபாவப்படியும், கொள்கைப் படியும் எழுதி விளம்பரப் படுத்திக்கொண்ட புரட்டு என்பதை அடியில் வரும் விவரங்கள் ருசிப்பிக்கும்.
வராக புராணத்தில் ஆண் திரிமூர்த்திகளிலிருந்து ஒரு சக்தியுண்டாகி மூன்று பகுதிப்பட்டு லட்சுமி, சரஸ்வதி, காளியென்ற பெண் திரிமூர்த்திகளுண்டானார்கள் என்று வரையப்பட்டிருக்கிறது. இப்புராணத்திற்கு நேர்முரணாய் மார்க்கண்ட புராணத்தில் மேற்படி அம்மன் திரிமூர்த்தி களிலிருந்து சாமி திரிமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு,
சிவனுற்பத்தியானதாக எழுதப்பட்டிருக்கிறது. லிங்க புராணத் தில் சிவனுடைய இடது பக்கத்திலிருந்து விஷ்ணுவும், லட்சுமியும், வலது பக்கத்திலிருந்து பிரம்மாவும், சரஸ்வதியும் தோன்றினார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதே லிங்க புராணத்தில் பிரிதோரிடத்தில் சிருஷ்டிப்பு கிரியை நடத்த சக்தியில்லாமல் பிரம்மா அழுத கண்ணீரிலிருந்து சிவனுற் பத்தியாகி அவ்விருவர்களுமாக கிருஷ்டிப்பு கிரியை நடத்தினார்களென்றும் புகல்கின்றது. மச்சபுராணத்தில் பிரம்மாவிலிருந்தே சிவனுற்பத்தியானதாக அறியக் கிடக் கின்றது.
எல்லா வற்றையும் பொய்மைப்படுத்தகூடிய வகை யில், நாரத புராணத்தில், நாராயணனுடைய வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் விஷ்ணுவும், நடுவில் சிவனும் தோன்றினதாக புகல்கின்றது. நாராயணன் என்ற பெயரே பிரம்மாவுக்கு எற்பட்ட காரணப் பெயர் என்பதாக மனுஸ் மிருதி அ. 1. 10ல் புகல்கின்றது. பிரம்மா ஜலத்தில் அசைவாடிக் கொண்டிருந்ததால், (நாரம் - ஜலம், அயனம் - அசைவாடிக் கொண்டிருந்ததால்) நாராயணமென்ற பெயர் உண்டாயிற்றாம்! விஷ்ணுவுக்கும் நாராயணன் என்ற பெயரிருப்பதாக பல புத்தகங்கள் வெளியிடுகின்றன.
மேலே லிங்க புராணீகர் சொல்லியபடி சிவனுடைய இடது பக்கத்தில் தோன்றிய லட்சுமியும், மகாபாரதத்தில் அமுதம் கடையும் தருணத்தில் அமுதம் பிறப்பதற்கு முன் தோன்றிய சங்க நிதி, பதுமநிதி, சிந்தாமணி, இரதி, அகலிகை, இந்திராணி, அறுபதினாயிரம் ரம்பாஸ்திரீகள், காமதேனு, கற்பகவிருட்சம், அயிராவதம்,
வெள்ளைக் குதிரை முதலானவர்களோடு தோன்றிய லட்சுமியும் ஒன்றா? வேறா? என்பதை ஆஸ்திகர்கள் தான் சொல்ல வேண்டும். அண்ணாமலை புராணத்தில், சிவனிடத்தில் குடிலை என்னும் சக்தி தோன்றி அதில் பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன், முதலிய பஞ்சகிருத்தியங்களுக்குரியவர்கள் தோன்றினார் களாம்! அப்படியானால் சிவனும், ருத்திரனும் தனித்தனி தெய்வங்களாகிறதே! விஷ்ணுவை தக்கனுடைய தாயென்றும்,
மகளென்றும் சொல்லப்படுகிற அதிதியின் குமாரரிலொரு வராக சில புத்தகங்கள் வெளியிடுகின்றன. விஷ்ணுவின் உந்திக்கமலத்திலிருந்து (தொப்பிளில் தோன்றிய தாமரைக் கொடியிலிருத்து) பிரம்மா தோன்றினதாக மகாபாரதம் புகல்கின்றது. பிரம்மாவை சிருஷ்டிகர்த்தாலென்று சொல் வதற்கு முரணாக, பூர்வீக இருக்கு, அதர்வன வேதங்களில் சிருஷ்டி கர்த்தாவுக்கு விஸ் வகர்மா, இரண்யகர்ப, பிரஜாபதி என்ற பெயர்களிடப் பட்டிக்கிறதே தவிர பிரம்மா என்கிற வார்த்தையே வேதங்களிலும், பிராமாணங்களிலும் காணப்பட வில்லை.
மேலும் இருக்கு வேதத்தின் நர்ககுந்த வியாக்கி யானத்தில் அக்கினி, இந்திரன், சூரியன் என்ற மூவரை தேவர்களாக சொல்லப்பட்டிருக்கிறதே தவிர தேவர்களுள் முக்கிஸ்தர் ஜாப்தாவில் விஷ்ணுவின் பெயரைக் காணோம். நாலு வேதத்திலும் பயங்கரமான ஊளை சப்தமிடுகிற ருத்திர னுடைய பெயர் வருகிறதேயொழிய சிவன் என்ற வார்தையே கிடையாது. பரமசிவனுக்கு விநாயகர் சிரேஷ்ட புத்திரர் என்பது உலகமறிந்த ரகசியமாய் இருக்கிறது.
பிள்ளையார் புராணத்தில் விக்கிர துண்ட விநாயகருக்கு இராசதம், தாமதம், சாத்வீதம் என்ற முக்குணங்களிருப்பதாகவும், இராட்சத குணத்தில் பிரம்மாவும், தாமதகுணத்தில் விஷ்ணுவும், சாத்வீக குணத்தில் சிவனும் தோன்றினதாக அறியக்கிடக் கின்றது. மற்றொரு புராணத்தில் ஆதி சக்தியிலிருந்து திரிமூர்த்திகளும் தோன்றினார்கள்யென்றும், அப்பால் இந்த ஆதிசக்தி இம் மூவர்களையும் புருஷர்களாக வைத்துக் கொண்டாளென்றும் தெரியவருகிறது.
இத்திரிமூர்த்திகளில் ஒருவராகிய விஷ்ணு 10 அவதார மெடுத்ததாக புகலும் பல புத்தகங்களுக்கு முரணாக, பாகவத புராணத்தில் 21 என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவனுக்கு 5 தலை இருக்கும்போது 10 கண்கள் இருக்கவேண்டியதை மறந்து முக்கண்ணன் என்று சொல்வதெப்படியோ! இராமாயணக் கதையில் சிவனை விஷ்ணுவுக்கு அடுத்த ஸ்தானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மகாபாரதத்தில் சில இடத்தில் விஷ்ணு தான் பெரியவரென்றும், சில இடத்தில் சிவன்தான் பெரிவன்ரென்றும், முன்னுக்குப் பின் முரணாக சொல்லப்பட்டிருக்கிறது. பிரபஞ்ச சிருஷ்டிக்கு சிவனே மூலகர்த்தா என்று புகலும்,
லிங்க புராணம்-அண்ணாமலை புராணம் போன்ற சிவபுராணங்களுக்கு புறம்பாய் மகாபாரதம் ஆதிபர்வம் பிரபஞ்ச சிருஷ்டி சருக்கத்தில் பிரம்மாவே சகலத்தையும் சிருஷ்டித்ததாக புகலப்பட்டிருக்கிறது. மானிடர் களைப்போல் திரிமூர்த்தி களாகிய தெய்வங்களுக்கும், நட்சத்திரன்கள் சொல்லப் பட்டிருக்கிறது. பிரம்மாவுக்கு  ரோகிணியும், விஷ்ணுவுக்கு திருவோணமும், சிவனுக்கு திருவாதிரையும் சென்ம நட்சத்திரமாமே!
சிவனுக்கு பிரமஹத்தி சனியன் பிடித்து 12 வருஷம் சுடலை சுற்றி திரிந்து பலவித கோரணிகளும் செய்தாராமே! திரிமூர்த்திகளும் சேர்ந்து செய்த துர்கிர்த்தியத்தால் அங சூயையின் சாபமடைந்து சிறிய பாலகர்களாய் அவளண் டையில் அநேக காலம் தங்களுடைய சிருஷ்டி திதி, சங்காரமென்னும் தொழிலை இழந்து விட்டு இருந்ததும், கண்டகி தாசியால் இம்மூர்த்திகள் இரண்ய கர்ப்பம் சாளக்கிராமம் சிவனாகமென்ற கல்லுகளாக சபிக்கப்பட்டது,
நாகவல்லியாலும் கல்லாக சபிக்கப்பட்டதும், அரிகரன் பிறந்தது போன்ற பல ஆபாசக் கதைகள், புராணங்களில் காணப்படுகின்றன. அக்கதைகளில் அடங்கி இருக்கும் வார்த்தைகளை, இக்காலத்திய ஒரு இழிதகைமை யுடையவன்கூட வாயில் வைத்துப் போசவே மாட்டான். தமிழ்நாட்டு சகோதரர்களே! மேலே எழுதப்பட்டிருப்பவை எல்லாம் தெய்வீகத் தன்மை பொருந்திய புராண இதிகாசங் களிலிருப்பவைகளே தவிர எங்களால் எழுதப்பட்டதல்ல.
இத்தியாதி காரணங்களால் திரிமூர்த்திகள் என்ற பெயரே புராணீகர்களுடைய புரட்டுகளுக்குக் கீழ் சிருஷ்டிக்கப் பட்டதென்பது தெற்றென விளங்கவில்லையா? திரிமூர்த்திகள் என்ற பெயருடன் ஊர் தவறாது கோயில்களிலும், வீடுகளிலும், உலவிக்கொண்டு, தமிழர்களுடைய இரத்தத்தை உறிஞ்சி அடிமைக்கு ஆளாகிவிட்டதென்பதற்குக் கோயில் கட்டிய அரசர்கள் அரசுரிமை இழந்ததும்,
திரிமூர்த்திகளுக்கு புறம்பாய் உள்ள அன்னிய மதங்கள் வலுவடைந்து வருவதும், வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் தினம் தினம் ஆயிரக் கணக்கான மக்கள் அன்னியநாடு சென்று வெள்ளைத் தோட்டத்தில் சாவதும், திரிமூர்த்திகள் அவதரித்திருக்கும் இந்நாட்டில் 100க்கு 75 பேர்கள் பிச்சை எடுப்பதுமே போதிய சான்றாகும். திரிமூர்த்திகள் என்ற பெயரையே ஜனசமூகம் அறியும்படி சுயநலங்கொண்ட ஒரு சாரார் எழுதிய புரட்டு புராணங்கள்,
நாட்டில் மலிந்து கிடப்பதின் உட்கருத்தை கல்வி நாகரீகமடைந்த இக்காலத்தியவர்கள் கூட வெளியிடாமல், பாமரமக்கள் திரிமூர்த்திகளின் பெயரால் அறியாமை காரண மாக செலவுசெய்யும் லட்சக்கணக்கான பொருளையும், பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டு கெட்டுப்போன பண் டைய ராஜாக்களின் அறியாமை காரணமாக எழுதி வைக்கப் பட்ட சர்வமான்யங்களையும், தன்நலத்துக்கு உபயோகப் படுத்தக் கருதி மனதறிந்த வஞ்சகம் செய்து வருகிறார்கள்.
கஷ்டப்படும் இளைத்த கூட்டத்தாரை, வலுத்த பணக்கார, படித்த கூட்டத்தார் அழுத்துவதற்கு இத்திரிமூர்த்திகள் என்ற புரட்டு புராணங்களையும் கருவியாக உபயோகப்படுத்தி வரும் சூழ்ச்சியை நன்கறிந்த ஈரோடு ராமசாமிப் பெரியார் குடி அரசின் மூலம் தனக்குத்தானே நாயகனாக இருக்க வேண்டுமென்றும் புராணக்கட்டுக்கும், கோயில் கட்டுக்கும் தலை வணங்காமல் தன் மதிப்பைக் காத்துக்கொள்ள வேண்டு மென்று ஜனசமூகத்திற் கெடுத்துரைக்கிறார். அதற்காகவே சுயமரியாதை இயக்கத்தையும் தோற்றுவித்திருக்கிறர்.
திரிமூர்த்திகள் என்ற பெயரே புராணப்புரட்டு என்ப தையும் பார்ப்பனர்கள் பிழைக்கச்செய்த சூழ்ச்சி என்பதையும், அறிந்து கொள்வதற்கு மேலே எழுதப்பட்டிருப்பவைகளைக் கூர்ந்து கவனித்து சுயமரியாதை இயக்கத்திற்குத் தக்க பேராதரவு கொடுத்து பிறநாடுகளை போல் ஆக வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
-விடுதலை,11.3.16

ஜோதிபாபுலே பார்வையில் பிர்மா



ஜாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்த சித்திர கதைகள்
மாட்டிறைச்சி தடை செய்யப்படு கிறது. மாதவிலக்கு விலக்கப்படுகிறது. அன்றாடம் வெளியாகின்ற செய்திகள் குறித்து எண்ணிப்பார்த்தால், 1873ஆம் ஆண்டில் இதேபோன்றுதான் செய் திகள் வெளிவந்தன. அந்த ஆண்டில் தான் மகாராட்டிர மாநிலத்தில் மாபெரும் சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் கோவிந்த்ராவ் புலே வேதங்களையும், பார்ப்பனீயத்தையும் கண்டித்து அடிமைத்தனம் (குலாம்கிரி) குறித்து எழுதினார்.

தரிசு நிலத்தில் தோட்டக்காரர் எனும் சித்திரக்கதை நாவலாக ஜோதி புலேவின் விடுதலைப் போராட்டங் களை விளக்குகிறது.
நூற்றாண்டுகளுக்குப்பின்னர் எழுத்தாளர் சிறீவித்யா நடராஜன் மற்றும் ஓவியர் அபராஜிதா நினன் இணைந்து சித்திர நாவல் உருவாக்கி கொடுத்துள்ளார்கள். தரிசு நிலத்தில் தோட்டக்காரர்: ஜோதி புலேவின் விடுதலைப் போராட்டம்Õ நூல் உள்ளார்ந்த கற்பனைகளுடன்கூடிய பணியாக அமைந்துள்ளது.
நினன் கூறும்போது, “புலே சமூகப் படப்பிடிப்பாக அப்பட்டமாக எழுதினார்.  அவர் எழுதியவற்றிலி ருந்து சித்திரக்கதை (கிராபிக் நாவல்) மூலமாக விதைத்துள்ளோம். இந்நூலின் மூலமாக தாழ்த்தப்பட்டவர்களின் நிலைகுறித்து முழுவதுமாக இளைய தலைமுறையினர் எளிதாக புரிந்து கொள்ள முடியும்’’ என்றார்.
ஜாதியை எதிர்க்கின்ற வகையில் ஜாதிப்பிரச்சினைகள் குறித்து நவயனா பதிப்பகத்தார் முதல்முறையாக தனித் துவத்துடன் வெளியிட்டுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கத்துக்கு மாறாக நூல் வெளியீட்டு விழாவில் மாட்டுக்கறி விருந்து (ஜமா மஸ்ஜித்தில் அளிக்கப்படுகின்ற பஃப் கபாப்) அளிக்கப்பட்டது.

அதேபோல், பிரம்மனுக்கு மாத விலக்கு ஏற்படுவதாகக் கூறி பிரம் மனுக்கு Ôபிரம்மா சானிட்டரி நாப்கின்Õ களை அறிமுகம் செய்தார்கள். (பிரம்மன் படைப்புக்கடவுள் என்றால், அவனுக்கும் மாதவிலக்கு உண்டா? என்று புலே கேள்வி எழுப்பினார்) இதுபோன்று பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வந்த போதும், அதன் தாக்கம் என்பது தொடர்ந்து நீடிக்காமல்தான் உள்ளது. ஜாதி பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்கிறது என்பதை நவீன இந்தியாவில் திடுக்கிடும் முறையில் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. ஜாதிய அமைப்பு முறைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதுடன், ஜாதி குறித்து விவாதிக்கப்படாதவரை, வாழ்விலிருந்து சாவுவரையிலும் ஜாதியே எல்லாவற் றுக்கும் காரணமாகவே அமைந்துவிடு கின்றது என்பதில் அண்மையில் 17.1.2016 அன்று ரோகித் வெமுலாவின் தற்கொலை நிரூபித்துள்ளது.
நவயானா பதிப்பகத்தின் சார்பில் எஸ்.ஆனந்த் கூறும்போது, “புலேவின் எழுத்துகளை படிக்கும்போது, எப் போதுமில்லாத நிலையில் இதுபோன்ற நேரங்களில் அதிக அளவில் விழிப்பு ஏற்பட்டுவருகிறதுÕÕ என்றார்.
அப்பதிப்பதிகத்தின் சார்பில் மேலும் ஒரு நூல் வெளிவந்துள்ளது. எழுத் தாளர் கோண்ட் மற்றும் ஓவியக் கலை ஞர்கள் துர்காபாய் மற்றும்  சுபாஷ் வியாம் இணைந்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்திரக்காட்சிகளாக ÔபீமாயணாÕ என்கிற நூலாக வெளிக் கொணர்ந்துள்ளனர்.

பீமாயணா நூல்குறித்து பதிப்ப கத்தைச் சேர்ந்த ஆனந்த் கூறும்போது, Òசில ஆண்டுகளாக டில்லி பல்கலைக் கழகத்தில் பொது ஆங்கிலப் பாடத்தில் ÔபீமாயணாÕ நூல் வைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவனாக இருக்கின்ற என்னைப் பொறுத்தவரையில் தாழ்த் தப்பட்டவர்கள் அல்லாதோரிடையே இந்தக்கருத்துகளைக் கொண்டு செல்வது சவாலாக உள்ளது. அவர்கள் புலே, அம்பேத்கர் சிந்தனைகளை அறியாமல் இருந்தால், இதுபோன்ற ஜாதியால் ஏற்பட்டுவருகின்ற  பிரச் சினைகளில் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது’’ என்றார்.
சித்திரக் கதாசிரியர் சார்நாத் பானர்ஜியின் Ôவிசாகபுரியில் அனை வரும் அடங்கிவிட்டார்கள்Õ என்கிற நூலில், புதிய ஜாதிய வகுப்பைக் காண லாம். அந்நூலில் டில்லியில் தண்ணீருக் கான சண்டைகள் நடைபெறுவதைக் காணலாம்.
சித்திரக்கதாசிரியர் சார்னாத் பானர்ஜி கூறும்போது,
“நீங்கள் நல்லவராக இருந்தாலும், சிறந்த மருத்துவராக இருந்தாலும், உங்களின் ஜாதிப்பெயர் உங்களைக் காட்டிக்கொடுத்துவிடும். அதிலிருந்து நீங்கள் தப்பிவிட முடியாது. உங்களு டைய பெயரில் தாழ்த்தப்பட்டவர் என்று தெரியவரும்போது,  மக்கள் உங்களின் தகுதிநிலைகுறித்து சந்தேகப்படுவார்கள். இடஒதுக்கீட்டு முறையால் அந்த நிலையை நீங்கள் அடைந்தீர்கள் என்று அதிசயப் படுவார்கள். ஜாதிகளை ஒருங்கிணைப் பது குறித்து பேசப்பட்டுவருகிறது. இந்தியர்கள் முட்டாள்கள் அல்லர்.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நன்கு அறிந்தவர்கள். ஆனாலும், ஜாதிபேதங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.    என்னையே எடுத்துக் கொண்டால், நான் உயர்ஜாதியைச் சேர்ந்தவன். அதனால், என்னுடைய பணிகளில் ஜாதிய வேறுபடுகளுடன் பிரச்சினை வரும்போது, என்னுடைய மனிதநேயத்தை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அதேநேரத்தில், நான் ஒரு தாழ்த்தப்பட்டவனாக இருந்தால், நான் போராடுவதாக கூறுவார்கள்’’.
சித்திரக்கதைகள் போன்ற காட்சிப்படுத்தும் ஊடகங்களில் ஜாதிய வேறுபாடுகளை காட்டக் கூடாது. பார்ப்பனர்கள் அழகுடன் இருப்பதாக எப்போதும் காட்டப்படுகிறது. ராட்சசர்கள் அல்லது வில்லன்கள் என்று காட்டும்போது எப்போதும் கருப்பாகவே காட்டப்படுகிறார்கள். இந்த கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்க முடியாது’’ என்கிறார் சார்னாத் பானர்ஜி.
ஆனால், நினன் கூறும்போது, Òஎன் னுடைய சித்திரங்களில் எல்லோரையும் ஒன்றுபோலவே காட்டுகிறோம். பானர் ஜியின் பார்வை ஒரு பொருட்டல்ல. என்னுடைய கதாபாத்திரங்கள் தோற்றத் தில் எப்படி இருக்கின்றன என்பதை நான் கருத்தில் கொள்வதில்லை. ஆனால், கீழ்ஜாதி தொழிலாளிதான் என்னுடைய கதாநாயகன், அழகானவன்’’ என்றார்.
பன்னாட்டளவிலான இந்திய சித்திரக்கதை அமைப்பின் நிறுவனர் சரத் சர்மா கடந்த 20 ஆண்டுகளாக மக்களிடையே பணியாற்றிவருகிறார். அவர் கூறும்போது, “சித்திரக்கதைகளின்  துணிவுக்கான ஆணிவேர் இந்தியாவில் இருந்துள்ளது. சித்திரக்கதைக்கான பணிகளில் ரிக்ஷா இழுப்பவர் முதல் பேராசிரியர் வரை கதைகளுக்கேற்ப சித்திரங்கள் பாலியல் பேதங்கள், ஜாதிப்பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளன. மக்களிடையே பாகுபாடுகளை ஒழிக்க ஒரே வழி  பாதிப்புக்குள்ளாகும் மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதில்தான் உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் பகுதியில் சிறுவன் ஒருவன் பள்ளியில் பூஜை செய்வதற்கு அவன் அனுமதிக்கப்படவில்லை என்பதை விளக்கி உள்ளான்.
அவன் கதையை ஒவ்வொரு சம்பவத்தையும் சித்திரங் களாக காட்சிப்படுத்துகிறான். அவனு டைய சித்திரக்கதையிலிருந்து படங் களை நாங்கள் ஒளிப்படமாக எடுத்து, கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்வண்ணம் மக்களிடையே வழங்கி வருகிறோம்/
இந்த பிரச்சினைகள் கிராமங்களில் மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டின்படி, மாநகர்களில் அரசு பணி வாய்ப்பு கிடைத்து செல்லும்போது, சிறப்பாக பணிகளை செய்தபோதிலும், ஜாதிரீதியிலான ஒதுக்குதல் தொடர்கின்றது. பியூனாக இருக்கின்ற ஒருவர் கோப்புகளை மரியாதையுடன் கொடுக்காமல், தாழ்த்தப்பட்டவர்களைத் தொடக் கூடாது என்பதற்காக மேசையின்மீது தூக்கி வீச முடிகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு சித்திரக்கதை மிகவும் சரியான வழியாக உள்ளது’’ என்றார் சர்மா.
அவர் மேலும் கூறுகையில், “அண்மையில் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜாதி பாகுபாடுகள் ஆராயப்பட்டன. அந்நிகழ்வில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ள மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஆகியோரிடையே வறிய நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட ஒரு குழந்தையின் கல்லூரிவரையிலான பயணத்தை சர்மாவின் சித்திரக்கதைகள்மூலமாக விவரிக்கப்பட்டது. சித்திரக்கதைகளின் வாயிலாக புரிந்து கொள்வது மிக எளிமையாக உள்ளது’’ என்றார்.
_டைம்ஸ் ஆப் இந்தியா, 7.2.2016

-விடுதலை

சிவலிங்க ரஹசியமும் தமிழ் மக்களின் அறியாமையும்


(24.2.1929 - குடிஅரசிலிருந்து)
அறியாமையும், மூடநம்பிக்கையும் ஆகிய இவை இரண்டும் செய்விக்காத கெட்டசெய்கை கிடையாது. உதாரணமாக சாம்பலையும் மண்ணையும் முகத்திலும் உடம்பிலும் பூசிவிட்டு கழுத்திலும் கைகளிலும் ஏதேதோ கொட்டை மாலைகளை மாட்டி வெளியில் அனுப்பி வேடிக்கை பார்க்கிறது.
இன்னும் பார்ப்பனர்கள் காமபித்து அதிகமாய்ப் போய் ஆண்குறியும் பெண்குறியும் பிரஜாவிருத்தி, சரீரசுகம் இல் வாழ்க்கை இவைகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பதால் இவைதான் கடவுளர் பூஜிக்கப்பட வேண்டுமென்று சுமார் 2000 வருஷங்களுக்குமுன் ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி னார்களாம்.
அப்பொழுது அறிவாளிகளான நம்மவர்கள் இந்தத் தீச்செயலை எல்லாவித உபாயங்களாலும் தடுக்கத் தொடங் கினார்கள். நம்மவர்களுக்கு பயந்து சிலர் இந்த கடவுள் வணக் கத்தை ரகசியமாகவும், சிலர் பிரத்தியட்சக் கடவுளை விட்டு மண் ணாலும், கல்லாலும் பெண்குறி ஆண்குறி இரண்டும் சேர்ந்தி ருக்கும் விதமாகச் செய்வது அதை வணங்கியும் மற்றுஞ்சிலர் முழுமனித வடிவம் நிர்வாணமாகச் செய்தது அதை வணங்கி வந்தார்களாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தக்கடவுள்கள் உயர்ந்த விலையுள்ள புடவை உடுத்துகிறதும் விபசார உற்சவம் செய் கிறதுமான சாமிகளாக மாறிவிட்டன. ஆஹா இந்த சாமி களுக்குத்தான் நம்மவர்கள் வருஷாவருஷம் கோடிக்கணக் கான ரூபாய் செலவு செய்து நாசமாக்குகிறார்கள்.
பெரிய மதில் தின்ன பிராகாரம் கட்டி தங்கள் அறியாமையின் ஞாபகச்சின்னத்தை நிலைநாட்டுகிறார்கள். பால் பழம் சர்க்கரை கொண்டு தினம் 5 வேளை பூஜை செய்து ஆண் பெண் குறிகளுக்கு தடவி வழித்துக் கொடுக்கிற பஞ்சாமிர்தத்தை கொஞ்சம் போதும் (மிகவும் கொஞ்சமாக, ஏனென்றால் பார்ப்பன பூசாரி கணக்காகத்தான் கொடுப்பான்) தின்று கடைத்தேறி விட்டதாக நினைக்கிறார்கள்.
தமிழர்களே! சுயபுத்திக்கு மேன்மைகொடுத்து பட்சபாத மில்லாமல் தினமும் 2 நாழி நேரமாவது சாம்பல் பூசுதல், யானைத் தலை கடவுள், மூன்று தலைச்சாமி, ஒத்தைக்கால் தெய்வம், முதலியவற்றை அராய்ந்து பார்த்தால் இந்த ஆபாசத்தின் உண்மை விளங்காமல் போகாது.
இனிமேலாவது ஒவ்வொரு ஊரிலும் கோவில் என்பவற்றில் உள்ள சாமி என்பவற்றை பெய்ர்த்து தூரவைத்து விட்டு அதனுடைய வருமானத்தைக் கொண்டு ஏழைப்பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடமும் அறிவு வளர்ச்சிக்காக புத்தகாரியமும் ஏற்படுத்தி நாட்டை சயமரியாதை உள்ளதாகச் செய்யுங்கள். இன்னும் இந்த ஆண்குறி பெண்குறி தெய்வங்களை கும்பிட்டுக் கொண்டும் சாம்பலை பூசியும் சாணியைத்தின்று கொண்டுமே இருந்தால் பின்னால் இன்னும் எதைத்தான் தின்ன நேரிடுமோ தெரியாது. இவ்வளவு காலம் அறியாமையில் கிடந்து நஷ்டமும் கஷ்டமும் பட்டது போதும்,போதும். கடைசியில் நீங்கள் பூசிக்கும் லிங்கம் என்ன என்பதை மேனாட்டார் தெரிந்து கொண்டு உங்களை பரிகாசம் செய்கிறார்கள் என்பதை நினைப்பூட்டுகிறேன். பிறர் சொல்லுவானேன். நமக்கே நம்முடைய இந்த வெட்கக்கேடான ஆசாரத்தில் அவமானத்தினால் தலை குனிந்து போகிறதில்லை. ஏன்! இது அறியாமை! மூடநம்பிக்கை!
-விடுதலை,12.2.16

புதன், 25 மே, 2016

காகத்திற்குக் கண் பொட்டையானது ஏன்?

Corvus corax (FWS).jpg
காகத்திற்குக் கண் பொட்டையானது ஏன்?
இராமனது மனைவியான சீதை மேலாடையின்றி ஸ்தனத் தைத் (மார்பு) திறந்து போட்டுக்கொண்டு பாலிப் பெண்களைப் போல் காட்டில் திரிந்து கொண்டிருந்தாள். ஒரு காகமானது அவளுடைய பருத்துத் திரண்டுருண்டு மிருதுவாகவிருந்த ஸ்தனத்தை மாங்கனி என்று கருதிக் கொத்திவிட்டது. இராமன் இந்தக் கண்றாவியைப் பார்க்கச் சகிக்காதவனாய் உடனே தன் கையிலிருந்த தர்ப்பைப் புல்லால் அதன் கண்னைக் குத்தி விட்டானாம் அதிலிருந்து தான் காகத்திற்கு ஒரு கண் பொட் டையாகி விட்டதாம். எப்படி?
27.11.1943, குடி அரசிலிருந்து...
புரோகிதர்: ஓய், சுப்பரமணிய முதலியாரே! நாளைக்கு
8 ஆம் நாள் உங்கப்பாவுக்கு திதி வருகிறது. திதியை அதிகாலையிலேயே முடித்து விட்டால் நன்றாய் இருக்கும். ஏன் என்றால், நான் அன்று காலை 10 மணிக்கு நாயக்கர் வீட்டுக்கும் போக வேண்டும். அங்கு கர்ணபூஷண முகூர்த்தம். அல்லாமலும் அதிகாலையில் திதி செய்வது மிகவும் விசேஷமானது முதலியார்.
சரி சுவாமி, அப்படியே ஆகட்டும். தாங்கள் மாத்திரம் அதிகாலையில் வந்து விடுங்கள். நாங்கள் ஸ்நானம் செய்து விட்டு சாமக்கிரிகைகளோடு தயாராய் இருக்கிறோம். (முதலியார் தன் மனைவியை அழைக்கிறார்) அடீ!
அண்ணியார்: (பெரிய வீட்டுப் பெண்களை அண்ணியார் என்று தான் கூப்பிடுவது) ஏனுங்கோ
முதலியார்: சாமி சொன்னதைக் கேட்டாயா?
அண்ணியார்: ஆமா, நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
முதலியார்: இன்னைக்கு எட்டாம் நாள் ஞாபகமிருக்கட்டும். காலமே நேரமே ஸ்நானம் செய்து விட்டு சாமிக்குக் கொடுக்கும் சாமான்கள் எல்லாம் தாராளமாய் ரெடியாய் வைத்து இருக்க வேண்டும்.
தம்பி: (பக்கத்தில் இதைக்கேட்டுக் கொண்டிருந்த முதலியார் மகன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறவர்) என்னப்பா என்னமோ சொன்னீங்களே, என்னத்திற்கு தாராளமாய், ரெடியாய் இருக்க வேண்டும்?
முதலியார்: உங்க தாத்தாவுக்கு, எட்டாம் நாள் திதி சாமி காலமே எங்கேயோ போகணுமாமா. அதற்காகக் காலையிலேயே எல்லாம் தயாராய் இருக்க வேண்டும் என்று சொன்னேன். காலம் பஞ்சகாலம் சாமிக்குத் தாராளமாய்க் கொடுப்பமே அவர் ஒரு 2, 3 மாதத்துக்கு ஆவது சாப்பிடட்டும்.
தம்பி: அதற்கு இந்த ஆசாமி (அய்யர்) என்னத்துக்கு வந்தாரு? எதற்காக கொடுக்கிறது? யாருக்குப் பஞ்சம்?
முதலியார்: அடே அவர் சாமிடா. அப்படி எல்லாம் சொல்லாதே. மரியாதையாய்ப் பேசு.
தம்பி: என்னப்பா கோவிலிலே இருக்கிறதும் சாமி, இந்தத் தடிராயனும் சாமியா? அப்படின்னாக்க கோயிலிலே இருக்கிற சாமிக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது. ஒரு நாயை முதலியாரே, முதலியாரே என்று கூப்பிட்டால் நமக்குக் கோபம் வராதாப்பா? அது போல் இந்தப் பிச்சை எடுக்கிற மனுஷனை சாமிண்ணு கூப்பிட்டால் கோயிலில் இருக்கிற சாமி கோபித்துக் கொள்ளாதா?
முதலியார்: என்னடா, அதிகப்பிரசங்கிப் பயலே இப்படி ஆய்விட்டாயே. இதெல்லாம் எங்கடா படிச்சே? இந்த சுயமரியாதைகாரப் பயல்களோடே சேர்ந்து கெட்டுப் போய் விட்டாப்லே இருக்கிறதே. மட்டு மரியாதை, மனுஷாள் கினுஷாள் ஒண்ணும் இல்லாமேப் போச்சே இனிமேல் இப்படியெல்லாம் பேசினால் பார்த்துக்கோ அப்புறம் என்ன நடக்கும் என்று. 
-விடுதலை,6.5.16

சந்திரன்-தேய்வது ஏன்?

இரவில் முழு நிலவின் தோற்றம். It is patterned with a mix of light-tone regions and darker, irregular blotches, and scattered with varying sizes of impact craters, circles surrounded by out-thrown rays of bright ejecta.

இதுதான் இந்துமதம்: சந்திரன்-தேய்வது ஏன்?
சந்திரனின் குரு வியாழன் பகவான் என்ற தேவகுரு குரு ஊரில் இல்லாத சமயம் குருவின் பத்தினியாகியதாரை என்பவளுடன் உடலுறவு கொண்டான் இப்படி குரு இல்லாத சமயத்தில் எல்லாம் காரியம் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் குருவே நேரில் பார்த்துவிட்டான்.
ஆத்திரங்கொண்டு,  உனது கலை நாளுக்கொன்றாய் குறைந்து  போகக்கடவது என்று சந்திர னுக்குச் சாபமிட்டு விட்டான் குரு. அதிலிருந்துதான்! தேய்பிறை ஏற்பட்டதாம். மீண்டும் சிவபெருமானை நோக்கி சந்திரன் தவம் இருந்து. அடுத்த பதினைந்து நாள் தனது கலை வளர வரம் பெற்று விட்டானாம். அதுதான் வளர் பிறையாம்.
எப்படி?
காகத்திற்குக் கண் பொட்டையானது ஏன்?
இராமனது மனைவியான சீதை மேலாடையின்றி ஸ்தனத் தைத் (மார்பு) திறந்து போட்டுக்கொண்டு பாலிப் பெண்களைப் போல் காட்டில் திரிந்து கொண்டிருந்தாள். ஒரு காகமானது அவளுடைய பருத்துத் திரண்டுருண்டு மிருதுவாகவிருந்த ஸ்தனத்தை மாங்கனி என்று கருதிக் கொத்திவிட்டது. இராமன் இந்தக் கண்றாவியைப் பார்க்கச் சகிக்காதவனாய் உடனே தன் கையிலிருந்த தர்ப்பைப் புல்லால் அதன் கண்னைக் குத்தி விட்டானாம் அதிலிருந்து தான் காகத்திற்கு ஒரு கண் பொட் டையாகி விட்டதாம். எப்படி?
27.11.1943, குடி அரசிலிருந்து...
புரோகிதர்: ஓய், சுப்பரமணிய முதலியாரே! நாளைக்கு
8 ஆம் நாள் உங்கப்பாவுக்கு திதி வருகிறது. திதியை அதிகாலையிலேயே முடித்து விட்டால் நன்றாய் இருக்கும். ஏன் என்றால், நான் அன்று காலை 10 மணிக்கு நாயக்கர் வீட்டுக்கும் போக வேண்டும். அங்கு கர்ணபூஷண முகூர்த்தம். அல்லாமலும் அதிகாலையில் திதி செய்வது மிகவும் விசேஷமானது முதலியார்.
சரி சுவாமி, அப்படியே ஆகட்டும். தாங்கள் மாத்திரம் அதிகாலையில் வந்து விடுங்கள். நாங்கள் ஸ்நானம் செய்து விட்டு சாமக்கிரிகைகளோடு தயாராய் இருக்கிறோம். (முதலியார் தன் மனைவியை அழைக்கிறார்) அடீ!
அண்ணியார்: (பெரிய வீட்டுப் பெண்களை அண்ணியார் என்று தான் கூப்பிடுவது) ஏனுங்கோ
முதலியார்: சாமி சொன்னதைக் கேட்டாயா?
அண்ணியார்: ஆமா, நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
முதலியார்: இன்னைக்கு எட்டாம் நாள் ஞாபகமிருக்கட்டும். காலமே நேரமே ஸ்நானம் செய்து விட்டு சாமிக்குக் கொடுக்கும் சாமான்கள் எல்லாம் தாராளமாய் ரெடியாய் வைத்து இருக்க வேண்டும்.
தம்பி: (பக்கத்தில் இதைக்கேட்டுக் கொண்டிருந்த முதலியார் மகன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறவர்) என்னப்பா என்னமோ சொன்னீங்களே, என்னத்திற்கு தாராளமாய், ரெடியாய் இருக்க வேண்டும்?
முதலியார்: உங்க தாத்தாவுக்கு, எட்டாம் நாள் திதி சாமி காலமே எங்கேயோ போகணுமாமா. அதற்காகக் காலையிலேயே எல்லாம் தயாராய் இருக்க வேண்டும் என்று சொன்னேன். காலம் பஞ்சகாலம் சாமிக்குத் தாராளமாய்க் கொடுப்பமே அவர் ஒரு 2, 3 மாதத்துக்கு ஆவது சாப்பிடட்டும்.
தம்பி: அதற்கு இந்த ஆசாமி (அய்யர்) என்னத்துக்கு வந்தாரு? எதற்காக கொடுக்கிறது? யாருக்குப் பஞ்சம்?
முதலியார்: அடே அவர் சாமிடா. அப்படி எல்லாம் சொல்லாதே. மரியாதையாய்ப் பேசு.
தம்பி: என்னப்பா கோவிலிலே இருக்கிறதும் சாமி, இந்தத் தடிராயனும் சாமியா? அப்படின்னாக்க கோயிலிலே இருக்கிற சாமிக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது. ஒரு நாயை முதலியாரே, முதலியாரே என்று கூப்பிட்டால் நமக்குக் கோபம் வராதாப்பா? அது போல் இந்தப் பிச்சை எடுக்கிற மனுஷனை சாமிண்ணு கூப்பிட்டால் கோயிலில் இருக்கிற சாமி கோபித்துக் கொள்ளாதா?
முதலியார்: என்னடா, அதிகப்பிரசங்கிப் பயலே இப்படி ஆய்விட்டாயே. இதெல்லாம் எங்கடா படிச்சே? இந்த சுயமரியாதைகாரப் பயல்களோடே சேர்ந்து கெட்டுப் போய் விட்டாப்லே இருக்கிறதே. மட்டு மரியாதை, மனுஷாள் கினுஷாள் ஒண்ணும் இல்லாமேப் போச்சே இனிமேல் இப்படியெல்லாம் பேசினால் பார்த்துக்கோ அப்புறம் என்ன நடக்கும் என்று. 
-விடுதலை,6.5.16

பெண்ணுக்குத் தாடி மீசை முளைக்காதது ஏன்?

நம்ப முடியுமா?
பெண்ணுக்குத் தாடி மீசை
முளைக்காதது ஏன்?
மாண்டவ்விய முனிவரும் அவர் மனைவி டிண்டிகையும், காசி யாத்திரை போகவேண்டித் தனது பக்குவமடைந்த பெண்ணை வேறு யாரிடத்திலும் விட்டு விட்டுப் போக பயந்து கொண்டு எமதர்மராசன் நல்ல உத்தமனென்றும் உலகத் திலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் நீதி பரிபாலனம் செய்து வரும் தர்மராஜ னென்றும் கருதி அவனிடத்தில் அப் பெண்ணை அடைக்கலமாக வைத்து விட்டுப் போனார்கள்.
அப்படி நம்பி வைத்து விட்டுப் போன பெண் மீது சகல ஜீவராசிகளின் பாப புண்ணியங் களையெல்லாம் நீதி வழுவாது, விசாரித்துத் துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்யும் அந்தக் காலனே காதல் கொண்டு இரவானவுடன் அப்பெண் மணியிடத்தில் சுகபோக இன்பத்தை அனு பவிப்பதும் விடிய ஒரு நாழிகைக்கெல்லாம் அம்மடவன் னத்தை வாயில் போட்டு விழுங்கி விடுவதுமாகவிருந்தான் ஒரு நாள் குளிக்கச் சென்றவன் தடாகத்தின் கரையில் அவளை உமிழ்ந்து மடத்தில் உட்கரவைத்துவிட்டு குளிக்கப் போய் விட்டான்
தற்செயலாய் அங்கு வந்த அக்கினி பகவான் அவளைக் கண்டு மோகித்து அவளைக் கூடும்படியாகிவிட்டது. எம தர்மன் வரும் நிலையில் அக்கினிபகவானை அவள் விழுங்கி விட்டாள்; எமதர்மராஜனும் அவள் தனித்திருப்பதாகக் கருதி அவளை எடுத்து விழுங்கி விட்டான்.
இப்பொழுது எமன் வயிற்றுக்குள் ஒரு பெண் அவள் வயிற்றுக்குள் அக்னிபகவான் அக்கினி பக வான் பெண்ணின் வயிற்றில் மாட்டிக் கொண்டதால் யாகம் செய்பவர்களும் தேவர்களும் அக்கினி இல்லாமல் தவித்துப் போனார்கள். ஆகையால் தேவர்களெல்லாம் ஒன்று கூடி வாயு பக வானிடத்தில் அக்கினி பகவானைக் கண்டுபிடிக்குமாறு கட்ட ளையிட வாயுபகவான் அட்டத்திக்குப்பாலர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்தான் தேவர்களும் நவக்கிரகாதிபதிகளும் விருந்துக்கு வந்திருந்தனர்.
எமனுக்குப் பக்கத்தில் மட்டும் இரண்டு இலைகள் தனியே போடப்பட்டிருந்தன. எமன் வாயுபகவானை நோக்கி ஏன் இரண்டு இலை பிரபுவே உங்கள் வயிற்றிலிருக்கும் கன்னிகை பசியால் வருந்துவாளாகையால் அவளையும் உம்முடன் வைத்துக் கொண்டு சாப்பிடும் என்று கூறினான். உடனே எமதர்மராஜனும் கன்னிகையைக் கக்கி  விட்டான்.
சரி, இன்னொரு இலைக்கு ஆள் எங்கே என்று கேட்கவும். வாயுதேவன் கன்னிகையை நோக்கி கன்னிகையே அக்கினி பகவான் பசி தாங்காதவராயிற்றே ! அவரையும் உன் பக்கத்தில் வைத்துக்கொண்டு எல்லோரும் சாப்பிடலாமே என்றான். அப் பெண்மணியும் கக்கிவிட்டாள்.
அக்கினிபகவான் பசிக் கொடுமையால் அகோர சுவாலை யுடன் வெளி வந்தபடியால் கோபாக்கினியால் அவள் முகத்திலிருந்த மீசை, தாடியெல்லாம் பொசுங்கிப் போய்விட்டனவாம்! அதிலிருந்துதான். பெண்களுக்கு மீசை, தாடி முளைக்க வில்லையாம். எப்படி?
-விடுதலை,6.5.16

ஞாயிறு, 22 மே, 2016

மகாலட்சுமி குடியிருக்கும் இடமாம்

மகாலட்சுமி குடியிருக்கும் இடமாம்
பிரம்ம தேவன் உபதேசித்த மோகினி கவசம் பவிஷ் யோத்ர புராணத்தில் உள்ளது.
“கரௌ மஹாலயா ரக்ஷேதங்குளிர் பக்த வத்ஸலா
வைஷ்ணவீபாது ஜங்கேச மாயா மேட்ரம் குதம் தாதா”
பொருள்: மஹாலய தொடைகளையும் வத்ஸலா கை விரல்களையும் வைஷ்ணவி ஆடு தசைகளையும், மாயா
ஆண், பெண் குறியையும் மலத்துவாரத்தையும் காத்து ரட்சிக்க வேண்டும்.
“ஆரண்யே ப்ராந்தரே கோரே ஸத்ரு ஸங்கே மஹாஹவே
ஸஸ்த்ர காதே விஷே பீதே ஜபன் ஸித்தி மாவப்னுயாத்”
பொருள்: நடுக்காட்டில் அச்சப்பட்டாலும் திருடர்கள், எதிரிகள் நடுவில் மாட்டிக் கொண்டாலும், ஆயுதத்தால் தாக்கப்படும்போதும் போரிலும், விஷம் குடித்திருந்தாலும் இதைப் பாராயணம் செய்தால் உடனே காப்பாற்றப் படுகிறார்கள்.
“போஜயேத் ப்ராஹ்ணாம் ஸ்சைவ லக்ஷ்மீர்வஸ்தி ஸர்வதா
பதிதம் கவசம் நித்யம் பக்த்யா தவ மயோதிதம்”
பொருள்: பிராமணர்களுக்கு யார் சாப்பாடு போட்டு ஆதரிக்கிறார்களோ அவர்களது இல்லத்தில் மகாலக்ஷ்மி நிரந்தரமாக குடியிருக்கிறாள்.
ஆதாரம்: பொன் பாஸ்கர மார்த்தாண்டன் எழுதிய தேவி தரிசனம் க்ஷிமிமிமி சோட்டானிக்கரை பகவதி அம்மன்.
-போத்தனூர் இரா. உமாபதி
 -விடுதலை,29.1.16