வியாழன், 3 அக்டோபர், 2019

இதுதான் நவராத்திரி விரதமாம்!

அபிதானசிந்தாமணி கூறுகிறது


நவராத்திரி விரதம் - 1. ருதுக்களில் வசந்தருது, சரத்ருது என்னும் இரண்டு ருதுக்களும் மனிதருக்கு ரோகத்தை விளைத்து நோய் செய்வதால் யமனுடைய இரண்டு கோரப்பற்களுக்குச் சமானமாகக் கூறப்பட்டி ருக்கின்றன. ஆகையால், அவற்றால் உண்டாகும் துன்பத்தினின்றும் நீங்க வேண்டிய மனுஷர் இந்த நவராத்திரி விரதத்தை செய்தல் வேண்டும்.

பூஜைக்கு வேண்டியவைகளை அமாவாசை தினத்திலேயே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை போஜனத்துடன் உபவாசியாய் இருந்து மறுநாள் பிரதமை முதல் பூஜைக்கு ஆரம்பித்தல் வேண்டும்.

நான்கு முழ நீளமும் ஒரு முழ உயரமுள்ள வேதி கையமைந்த அலங்கரித்த மண்டபத்தில் அமைத்துத் தான் வேதம் உணர்ந்த வேதியர் ஒன்பதின்மர் அல்லது அய்வர், மூவர், ஒருவருடன் மண்டபத்திற்குச் சென்று ஆசனத்தில் சங்கு, சக்ர, கதா பத்மத்துடன் கூடிச் சதுர்ப்புஜத்துடன் ஆயினும், பதினெண்கரத் துடன் கூடியவளாகவே தேவியின் திருவுருவத்தைத் தாபித்து அலங்கரித்துக் கும்பபூஜையின் நிமித்தம் கலசம் தாபித்து அதில் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களை நிரப்பி மாவிலை முதலிய அய்ந்து வகைத் தளிர்களை மேலே வைத்துப் பூஜித்தல் வேண்டும்.

பின் சங்கற்பஞ் செய்துகொண்டு வாசனைத் திரவி யங்களாலும்; பலவகை மண மலர்களாலும் தேவியைத் தூபதீபங்களால் மந்திரபூர்வமாய் விதிப்படி பூசித்து நவாவரண பூஜையுஞ் செய்து அர்க்கியங் கொடுத்துப் பலவகை நிவேதனங்கள் செய்தல் வேண்டும்.

பின் ஹோமார்த்தமாய் யோனிகுண்டம் அமைத் துத் தண்டிலம் இட்டு ஓமத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். பூஜிப்போன் சயன சகாதிகளை விட்டுத் தரையில் படுத்து உறங்க வேண்டும். பிரதமையில் அஸ்த நக்ஷத்திரங் கூடில் விசேஷமென்றும் அத்தி னத்தில் தேவியைப் பூஜிக்கின் சகலாக்ஷ்டங்களையுந் தருவள் எனக் கூறுவர்.

கும்ப பூசைமுதல் ஓமாந்தம் வரையிற் செய்யத் தருவனவற்றைச் செய்து பின் கன்னிகைகளைப் பூஜித்தல் வேண்டும். கன்னிகைகள் யாவரெனின் இரண்டு வயது முதல் பத்து வயது அளவுள்ளவர்களாம். இக்கன்னியர்களுக்கு முறையே குமாரி, திரிமூர்த்தி, ரோகணி, காளிகா, சண்டிகா, சாம்பரா, துர்க்கா, சுபத்திரா என்று ஒவ்வொரு பெயராகும். இவர்களை வேத மந்திரங்களால் பூஜித்தல் வேண்டும். மேற் சொன்ன கன்னிகையரைத் தினம் ஒவ்வொருவராக வேனும், அல்லது முதனாள் தொடங்கி ஒவ்வொன்று அதிகமாகவேனும், பூஜை நடத்தல் வேண்டும். ஒருவன் நவராத்திரி முழுதும் பூசிக்க அசந்தனாவனேல்  அஷ்டமியில் அவசியம் பூஜித்தல் வேண்டும். என்னென்னின் பூர்வம் தக்ஷயாகத்தை அழித்த பத்திரகாளி தோன்றிய தினமாகையால் என்க. அசக்தரானோர் சப்தமி, அஷ்டமி, நவமி இம்மூன்று தினத்திலும் பூசிப்பரேல் ஒன்பது தினத்திலும் பூசித்த பலனை அடைவர். இவ்விரதத்தை மேற்கொண்டவ ரெல்லாச் செல்வங்களையும் அடைந்து உயர்பதம் அடைவர். இதனை அநுட்டித்தோர் சுசீலன் சுகேது முதலியோர்.

2. விரதங்களில் ஒன்று. இது புரட்டாசி மாதம் பூர்வ பக்ஷப் பிரதமை, முதல் திரிதிகை வரையில் உருத்திரியையும், சதுர்த்தி முதல் ஷஷ்டி வரையில் இலக்குமியையும், சப்தமி முதல் நவமி வரையில் சரஸ்வதியையும், பூசித்துத் தசமியில் முடிப்பது. இதனை சுகேது என்னும் அரசன், அரசாட்சி யிழந்து வருந்தியதால் அவன் மனைவியாகிய துவேதியை ஆங்கீரச முனிவர் இவ்விரதம் அநுட்டிக்கக் கற்பித் தனர். அவ்வகை அவள் அநுட்டிக்க அவ்வநுட்டானத் திற்குப் பின் அவள் வயிற்றில் பிறந்த குமரனாகிய சூரியபிரதாபன் இழந்த நாட்டைப் பகைவரிடமிருந்து மீட்டனன் என்பர்.

இவ்வாறு அபிதானசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

ஜாதியின் பெயரால் பிறவி பேதங்களைக் கற்பித்து மக்களை ஒன்றுபட விடாமல் செய்து, தன்னைத்தானே உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலைகொண்டிருப்பதற்கு காரணம் மக்களின் அறியாமையே. நம் மக்களின் அறியாமைக்கு காரணம் அவர்களை சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கிவிட்டு, கல்வி உரிமையை மறுத்துவந்ததே முதன்மையான காரணமாகும்.

கடவுள், மதம், பக்தியைக் காட்டி, அப்பாவி பாமர மக்களை அச்சுறுத்தியே பார்ப்பனர்களின் சுரண்டல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சுரண்டிப் பிழைத்து வருவதற்கான  அறுவடையின்மீதே பார்ப்பனர்கள் கவனமாக இருந்து வருகிறார்கள்.

சவுண்டிப் பார்ப்பனர் முதல் சங்கராச்சாரி பார்ப் பனர்வரை வருணாசிரமத்தைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருந்து வருகிறார்கள். மனுதர்மம், பகவத் கீதை உள்ளிட்டவற்றை வருணாசிரமத்தை பாது காக்கும் கருவிகளாகக் கொண்டுள்ளார்கள்.

நம்மக்கள் விழிப்படைந்துவிட்டால், தங்களின் ஆதிக்கபுரி தகர்ந்துவிடும் என்பதாலேயே வஞ்சகப் பார்ப்பனர்கள், அவ்வப்போது வீடணர்களை உருவாக்கி வந்துள்ளனர்.

உழைக்கும் நம் மக்களை சிந்திக்க விடாமல், காலம், பொருள் உள்ளிட்ட அனைத்தையும் வீணடிக்கும் படியாக ஆண்டு முழுவதும் விநாயகன், ராமன், கிருஷ்ணன் என பிறக்காத கடவுள்களுக்கும் பிறந்த நாளைக் கொண்டாடச் செய்வது மற்றும் பிற பண்டிகைகளைக் கொண்டு பார்ப்பனர்களின் சுரண்டல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பண்டிகைகள், மதச்சடங்குகள், சாஸ்திர, சம்பிர தாயங்கள் என கடவுள், மதம், பக்தியின் பெயரால்  அறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை நம் மக்களிடையே மூடத்தனத்தை தொடர்ச்சியாக பார்ப்பனர்கள் பரப் பியே வந்துள்ளனர்.  அந்த வகையில்தான் மாதந் தோறும் பண்டிகைகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. அனைத்தையும் திட்டமிட்டு பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

நவராத்திரிக்குச் சொல்லப்படும் கதை கொஞ்சமாவது அறிவுக்குப் பொருந்துமா? கள் குடித்த பைத்தியக்காரன் உளறுவது போல் இல்லையா?

பகுத்தறிவு வெளிச்சக்கீற்று நம் மக்களிடையே வெள்ளமென பாய்ந்தால், பஞ்சகச்சங்கள் ஓட்டம் பிடித்துவிடும்.

- விடுதலை நாளேடு, 3. 10. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக