செவ்வாய், 10 ஏப்ரல், 2018

திருநீறு பூசுவதேன்?



திருநீறு என்றால் என்ன? எதற்காக அதை நெற்றியில் இடுவது? இடுகிறவர்கள் அதை என்ன கருத்தோடு இடுகிறார்கள்? என்கின்ற விஷயங்களை யோசித்துப் பார்த்தால் திருடர்க்கு அழகு திருநீறடித்தல் என்பது நன்றாய் விளங்கும்; இல்லா விட்டால் மூடர்க்கழகு" திருநீறடித்தல் என் பதாவது விளங்கும்.

எப்படியெனில், திருநீறு என்பது சாம்பல். அதை இடுவதால் கடவுளின் அருளைப் பெறலாம் என்று அதை இடுகின்றவர்கள் கருதுவதும் தாங்கள் எவ்வளவு அக்கிர மக்காரர் ஆனாலும் திருநீறிட்ட மாத்திரத் திலே சகல பாவமும் போய்க் கைலாயம் சித்தித்துவிடும் என்று நினைப்பதுமேயாகும்.

இதற்கு ஆதாரமாக திருநீறின் மகிமை யைப்பற்றிச் சொல்லுகின்ற பிரமோத்திர காண்டம் என்னும் சாஸ்திரத்தில் ஒரு பார்ப் பனன் மிக்க அயோக்கியனாகவும், கொலை, களவு, கள், காமம், பொய் முதலிய பஞ்சமா பாதகமான காரியங்கள் செய்துகொண்டே இருந்து ஒரு நாள் ஒரு புலையனான சண் டாளன் வீட்டில் திருட்டுத்தனமாய் அவன் மனைவியைப் புணர்ந்ததாகவும், அந்தச் சண்டாளன் இதை அறிந்து அந்தப் பார்ப் பானை ஒரே குத்தாகக் குத்திக் கொன்று அப்பிணத்தை சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொண்டு போய் எரித்து விட்டதாகவும், அந்தப் பார்ப்பனனை அவன் செய்த பாவங்களுக்காக எமதூதர்கள் கட்டிப் பிடித்து கும்பிபாகம் என்னும் நரகத்தில் தள்ளிக்கொண்டு போனதாகவும், அந்தச் சமயத்தில் சிவகணங்கள் இரத்தின விமா னத்துடன் வந்து அந்தப் பார்ப்பனனை எம தூதர்களிடமிருந்து பிடுங்கி இரத்தின விமா னத்தில் வைத்துக் கைலாயத்திற்குப் பார்வதி யிடம் கொண்டு போனதாகவும், எமன் வந்து,

இவன் மகாப்பாவம் செய்த கெட்ட அயோக்கியப் பார்ப்பனனாயிருக்க நீங்கள் கைலாயத்திற்கு எப்படிக் கொண்டு போக லாம்? என்று வாதாடினதாகவும், அதற்குச் சிவகணங்கள் இந்தப் பார்ப்பான் மீது சற்றுத் திருநீறு பட்டுவிட்டதால் அவனுடைய பாவம் எல்லாம் ஒழிந்து அவன் மோட்சத் துக்கு அருகனானதனால் பரமசிவன் எங் களை அனுப்பினார் என்று சொன்னதாக வும், அதற்கு எமன் சித்திரபுத்திரன் கணக் கைப் புரட்டிப் பார்த்து இந்தப் பார்ப்பான் ஒரு நாளும் திருநீறு பூசவில்லை, ஆதலால் இவனுக்கு மோட்சத்தில் இடமில்லை என்று சொல்லி வாதிட்டதாகவும், அதன்மீது சிவ கணமும் எமகணமும், எமனும் சிவனிடம் சென்று இவ்வழக்கைச் சொன்னதாகவும், பிறகு சிவன் இந்தப் பார்ப்பான் உயிருடன் இருக்கும் வரை மகாபாதகங்கள் செய்திருந் தாலும் இவனைக் குத்திக்கொன்று சுடு காட்டில் இவன் பிணத்தை எறிந்து விட்ட போது, மற்றொரு பிணத்தைச் சுட்ட சாம் பலின்மீது நடந்து வந்த ஒரு நாய் இவனது பிணத்தைக் கடித்துத் தின்னும்போது அதன் காலில் பட்டிருந்த அந்தச் சாம்பலில் கொஞ் சம் பிணத்தின் மீது பட்டுவிட்டதால், அவ னுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியதாயிற்று என்று சொல்லி எம னைக் கண்டித்து அனுப்பி விட்டுப் பார்ப் பானுக்கு மோட்சம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதலால் திருநீறு எப்படியாவது சரீரத் தில் சிறிது பட்டு விட்டால் எப்படிப்பட்ட அயோக்கியர்களுக்கும் மோட்சம் கிடைக்கு மென்று சிவன் சொல்லி இருப்பதைப் பார்த்து நமது சைவர்கள் திருநீறு அணி கின்றார்கள் - அந்த சாஸ்திரத்தின் அடுத்த அத்தியாயத்தில் திருநீறு அணியும் விதம், இடங்கள் எல்லாம் குறிப்பிட்டு இதில் எழு தக் கூடாத படுபாதகங்கள் செய்வதனால் ஏற்படும் பாவங்கள் எல்லாம் நீங்குமென்றும் அவன் பிதுர்க்கள் செய்த பாவங்கள் கூட நீங்கி நரகத்திலிருந்தாலும் சிவனிடத்தில் சேர்வார்கள் என்றும் எழுதப்பட்டிருக் கின்றது.

இவை: பிரமோத்திர காண்டம் 14ஆவது, 15ஆவது அத்தியாயத்தில் உள்ளது. இந்த ஆதாரத்தை நம்பி மோட்ச ஆசையால் திருநீறு அணிகின்றவர் திருடராகவாவது, அதாவது பேராசைக்காரராகவாவது, மூட ராகவாவது இருக்காமல் வேறு என்னவாக இருக்கக் கூடும்? என்பதை யோசித்துப் பார்க்கக் கோருகிறோம்.

- "விடுதலை" 29-12-1950

- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக