வியாழன், 12 ஜனவரி, 2017

வாரியாருக்கு வாயடைப்பு




திருவாரூரில் படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் ஊருக்கு காலட்சேபம் செய்ய திருமுருக கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். அவரைக் கலாட்டா செய்ய வேண்டுமென்பதற்காகவே, பள்ளிக் கூடத்திற்கு டிமிக்கி கொடுத்து விட்டு நண்பர்களுடன் செல்வேன்.

காலட்சேபத்தில் கதை கூறும்போது திரு.வாரியார் அவர்கள், உயிருள்ள ஒன்றையும் - மிருகங்களையோ, பறவைகளையோ கொன்று மனிதன் சாப்பிடுவதற்காக கடவுள் படைக்கவில்லை என்றார். நான் எழுந்து, சிங்கத்திற்கு கடவுள் என்ன உணவை படைத்தார் என அவரிடம் கேட்டேன்.

வாரியார் என்னை உட்காரும் படி அடக்கிவிட்டு தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிட லாமா? என்று மாமிசம் உண்போர் கேட்பார்கள். காய்கறி களை பறித்தபின் அவைகளின் வளர்ச்சி தடைப்படு வதில்லை. ஆனால், மனிதன் காய்கறிகளைத் தாராளமாக உண்ணலாம்; இது யாருக்கும் தெரியாது என்றார்.

உடனே நான் எழுந்து, கீரைத் தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி? என்று கேட்டேன். மறுபடியும் என்னை அடக்கி உட்கார வைத்தார் வாரியார்.

அன்று நான் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. அதனால் நானும் என்கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.

- கலைஞர்,  ஆதாரம்: சுடர் கொழும்பு

எவன் பிராமணன்?



எழுத்துரு அளவு    ஒரு பிரா மணனோ அல்லது வேறு யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும் போது, பிராமணரல் லாதார் அதை எதிர்த்துப் போரிட் டால் அதை முழுக்க முழுக்க நான் ஆதரிக்கிறேன்.

நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண் டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப்பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன்.

- காந்தியார் 16.9.1927 அன்று தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில்

-விடுதலை,12.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக