வெள்ளி, 19 ஏப்ரல், 2019

ஆன்மீக காமக் களியாட்டங்கள்!

கள்ளக்காதல்பற்றி ஆய்வு செய்த ஆர்.எஸ்.எஸ். எச்சியே!
கள்ளக்காதல்பற்றி ஆய்வு செய்யும் ஆரியத்தின்  நச்சியே! உனது ஆரிய பாரம்பரிய பாரதக் கதை - அதன் பாத்திரங்களிலிருந்து தொடங்கலாமா?

பஞ்ச பாண்டவர்கள் அய்வரும் குந்திக்கு எப்படி பிறந்தவர்கள்; இதிகாச கதைப்படி யாருக்குப் பிறந்தவர்கள்? பீஷ்மரின் கதை - மச்சகந்தி' பரிமளகந்தியானது - பருவ மடையாத பெண்களிடம் மோகித்து, சூரியனையே மறையச் செய்ததாக கதை விட்டு கலவி செய்த கதை தெரியுமா?

அட துரோபதியின் மைந்தனே! தூ, தூ'' என்ற அறிவாளிகள் - உரைத்து உமிழ்ந்த எச்சிலில் மிதப்பவனே!

உனது இராமன் ஏன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னான்?

பிறகு காட்டிற்குக் கொண்டு போய் நிறைமாத கர்ப்பிணியை தவிக்க விட்டான். அவளது கள்ளத் தொடர்பினால் ஏற்பட்ட கரு (இராவணனின்) என்ற சந்தேகத்தினால்தானே!

கடவுள் அவதாரத்திற்கே இப்படி ஒரு சந்தேகமா? என்று கேட்கமாட்டீர்களா?

கவுதம முனிவரின் மனைவி  அகலிகையைக் கற்பழித்ததினால், தேவேந்திரன் உடம்பெல்லாம் அது'' எங்கும் என்ற சாபம் பெறப்பட்டான்.

அதுமட்டுமா?

தாயையும் புணர்ந்த மாபாதகம் செய்தவனை ஏற்ற திருவிளையாடல்' புரிந்த தீவினைத் தீவட்டிகளே, திராவிடத்திடம் வாலாட்டாதே - வாலை ஒட்ட நறுக்குவோம்!

அரண்மனை நாயே,

அடக்கடா வாயை!'

என்ற கலைஞரின் வசனம்தானடா உனக்கு வாயடைப்புக்கு ஆப்பு!

உளறி, உளறி உன் அறியாமையால் ஊர் வம்பை விலைக்கு வாங்கவேண்டாம், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

எவ்வளவு காலம் இந்த ஆட்டம் - பாட்டம்!

பார்ப்போம்! பார்ப்போம்!!

- ஊசி மிளகாய்
- விடுதலை நாளேடு, 19.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக