வெள்ளி, 19 ஏப்ரல், 2019

திரௌபதியும் சுபத்திரையும், கிருஷ்ணன் மற்றும் அர்ஜினனின் களியாட்டங்களும்.

மதுவின் மயக்கத்தில் திளைத்த திரௌபதியும் சுபத்திரையும், கிருஷ்ணன் மற்றும் அர்ஜினனின் களியாட்டங்களும்.

இக் கதை மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் காண்டவ தாஹ பர்வத்தில் பகுதி 224ல் கூறப்படுகிறது. வாருங்கள் கதை கேட்போம்.

இந்திரப்பிரஸ்தத்தைத் தங்கள் வசிப்பிடமாக ஆக்கிக் கொண்ட பிறகு, சில நாள் கழித்து, கிருஷ்ணனிடம் பேசிய அர்ஜுனன், "வெப்ப நாட்கள் வந்துவிட்டன ஓ கிருஷ்ணா, ஆகையால், யமுனையின் கரைகளுக்கு நாம் செல்வோம்.
கிருஷ்ணா, நண்பர்களுடன் அங்கு விளையாடிவிட்டு, மாலையில் இங்கு திரும்பி வருவோம்" என்றான். அதன் பேரில் கிருஷ்ணன், "ஓ குந்தியின் மகனே அர்ஜுனனே, அதுதான் எனது விருப்பமும். ஓ பார்த்தா, நண்பர்கள் சூழ நாம் திருப்தியாக நீர்விளையாடித் திரும்புவோம்" என்றான்.

பிறகு, ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்த அர்ஜுனனும், கிருஷ்ணனும், யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்றனர்.

உயர்ந்த மரங்களுடன் கூடிய யமுனையின் கரையில் இருக்கும் ஒரு அற்புதமான இடத்தை அடைந்தனர். பல உயர்ந்த மாளிகைகளுடன் கூடிய அந்த இடம் தேவர்களின் நகரைப் போல இருந்தது. அந்த இடத்தில் கிருஷ்ணனும், அர்ஜுனனும், எண்ணற்ற விலை உயர்ந்த உணவு வகைகளையும், மது வகைகளையும், மற்றும் இன்பத்திற்கான அனைத்துப் பொருட்களையும், மலர்வளையங்களையும், நறுமணப் பொருட்களையும் குவித்தனர். தூய கதிர்கள் கொண்ட ரத்தினங்களால் அதன் உள் அறைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அந்த அறைகளுக்குள் நுழைந்த ஒவ்வொருவரும் தங்கள் இன்பத்திற்குத் தகுந்தபடி விளையாடினர். அந்த விருந்தில் கலந்து கொண்ட பெண்கள் பருத்த உருண்டையான இடைகளுடனும், பருத்து ஆழமாக இருக்கும் மார்புகளையும், அழகான கண்களையும், மதுவுண்டதால் தளர்ந்த தடுமாற்றம் கொண்ட நடையுடனும் இருந்த பெண்கள் கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் கட்டளைப்படி அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். சிலப் பெண்கள் தங்கள் விருப்படி கானகத்திலும், சிலர் நீரிலும், சிலர் அறைகளிலும் அர்ஜுனனும், கிருஷ்ணனும் வழிகாட்டியபடி விளையாடினர்.

திரௌபதியும், சுபத்திரையும் மதுவின் மயக்கம் அதிகமாகி, அங்கே விளையாடிக் கொண்டிருந்த பெண்களுக்கு விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்படி வாங்கிய மங்கையரில் சிலர் ஆனந்தக் கூத்தாடினர், சிலர் பாட ஆரம்பித்தனர், சிலர் சிரித்துக் கொண்டு கேலி பேச ஆரம்பித்தனர். சிலர் இன்னும் அருமையான மதுவகைகளை குடிக்க ஆரம்பித்தனர். சிலர் ஒருவர் முன்னேற்றத்தை ஒருவர் தடுத்து, ஒருவரோடு ஒருவர் சண்டையிட ஆரம்பித்தனர். சிலர் ஒருவரோடு ஒருவர் ரகசியம் பேசினர். அந்த மாளிகைகளும், கானகமும், புல்லாங்குழல் இசையாலும், வீணை மற்றும் மிருதங்க இசையாலும் நிறைந்து வளமையான காட்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தன.

இவ்வாறு தொடர்கிறது மிகுதி களியாட்டங்கள்...

நான் ஏன் இந்த கதையை கூறுகிறேன் என்றால் இவ்வாறான இதிகாசங்களை மேலோட்டமாக படித்தவர்கள், இந்த கதையின் கதாபாத்திரத்தில் ஒருவனான கிருஸ்ணனை கடவுளே ஆக்கிவிட்டிருக்கிறார்கள் இன்று. அவனுக்கு கோயில்களும் அதன்மூலம் சுரண்டல்களும் மூடநம்பிக்கைகளும் சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ளன. ஆகவே மகாபாரத கதையில் உள்ள தவறானவற்றை மறைத்து நல்லவற்றை மட்டும் மக்களுக்கு கூறியதாலேயே மக்கள் இவர்களை தெய்வீக பிறவிகளாக ஏற்றுக்கொண்டார்கள். நான் மகாபாரதத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களை தந்துள்ளேன். இதன்மூலம் எல்லோரும் மகாபாரதத்தையாவது முதலில் முழுமையாக அறிந்துகொள்ளட்டும்.

#பகிருங்கள்
#Share_This
- வேணு கோபால சங்கர் - ஆறாம் அறிவு, முகநூல் பக்கம், 19.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக