வியாழன், 25 ஏப்ரல், 2019

பிள்ளையார் பிறந்த கதை--இது அழுக்கு கதையல்ல!

நந்தவனத்தில் உலவிவந்த சிவ-பார்வதி தம்பதிகள்,ஒட்டியிருந்த படர்ந்த காட்டில்"எதற்கோ"நுழைந்தனர்.அங்கே யானைகள் இரண்டின் "கலவி "க் காட்சியைக் கண்டனர்.
கட்டுமீறிப்போன ஆசையில் கட்டிப்புரண்டனர் இந்தக் கடவுள் தம்பதிகள்.

தேவாரத்தில் சம்பந்தர் "பிடியதன்"என்று துவங்கும் பாட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (இப்பாடலை கூகிளில் சர்ச் செய்தபோது இப் பாடல் அழிக்கப்பட்டுள்ளது) .

கட்டுக்குலையாத மேனிகளில் அரும்பு கட்டியது வியற்வைத்துளிகள்.

கல்விக் கோலங்கொண்ட யானையைப் பார்த்தே மனைவிக்கு "ஆலிங்கன" ஆனணகளைப் பிறப்பித்தான் சிவன்.
எனவேதான், பிறந்த குழந்தை யானைமூஞ்சியாய் பிறந்து விட்டது.

முக்கண்ணனின் முதல் மைந்தனுக்கு இன்னொரு பிறவிக்கதையும் உண்டு.

கசமுக அசுரன் என்பவன் சாகாவரம் பெற்றவன், தேவர்களை வம்புக்கிழுத்து விளையாடுவதே இவனின் பொழுது போக்கு.
தன்னைச்சாகடிக்க யாருமில்லை என்ற தைரியத்தில் "நாமார்க்கும் குடியல்லோம் :நமனை அஞ்சோம் என்று கண்ணாமூச்சி காட்டினான் தேவர்களிடம்.
வெறுப்பும், கொதிப்பும் கொண்ட தேவர் குலம், திணறித்திண்டாடிச் சிவனை அடைக்கலம் கொண்டது.
தம்பதி சமேதரமாகத் தோட்டம் ஒன்றில் ஆட்டம் போட்டுக்கிடந்த உலகநாயகனும் நாயகியும், தற்காலிகமாகத் தங்கள் செயல்களை ஒத்திவைத்து, வதைபடும் தேவர் இனத்தைப் பரிசீலித்தனர்.
அப்போது அவர்கள் கண்களில் கலவிப்புரியும் யானைகளின் காட்சி தென்பட்டது.
அவ்வளவுதான்!
சிவனும் பார்வதியும் சும்மா இருப்பார்களா?
உடனே யானையாக உருமாறி விட்டனர்!
பிறகென்ன!?
இரும்பும் காந்தமும்தான்!!
இதன் விளைவு--பிறந்தார் பிள்ளையார்.
பிறந்தவர் யானை முகமும் ,மனித உடலுமாக இருந்தார்.
(ஆதாரம்:வலிவலம் கோவில் சிவனைப்பற்றிய திருஞானசம்பந்தர் "பிடியதன் உருவுமை "என்று தொடங்கிய பாடிய தேவாரப்பாடல்)
"வடிகொடு தனதடி வழிபடுமவரிடம்
கடிகண பதிவர வருளினன் மிகு கொடை"".

- ஆறாம் அறிவு குழுவில் ராஜமோகன்

22.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக