வெள்ளி, 19 ஏப்ரல், 2019

வேதவியாசருக்கு சுகர் பிறந்த கதை.

#சுகர்

வேதவியாசருக்கு சுகர் பிறந்த கதை.

ஒருநாள் வியாசர் தியானத்தில் இருந்தபோது அவரையறியாமல் விந்து வெளிப்பட்டுவிட்டது. சிந்தி கிடந்த அந்த ‘ரேதஸ்’ஸை ஒரு கிளி என்ன பண்ணியது? கொத்தித் தின்றுவிட்டது.

அதை கொத்தித் தின்ற கிளி சும்மாயிருக்குமா?... அந்தக் கிளி கர்ப்பமாகி விட்டதாம். கிளி கர்ப்பமானால் என்ன செய்யும்? முட்டை போடும். குஞ்சு பொரிக்கும். அது இன்னொரு அழகான கிளியாகும். ஆனால்... இந்த கிளி அப்படி அல்ல. வியாஸரின் வீரியம் சாப்பிட்ட கிளியல்லவா? அதனால் கர்ப்பமான கிளி... ஒரு குட்டியைப் போட்டது. கிளி குட்டி போட்டதா?... புராணம் அப்படித்தான் சொல்கிறது. கேள்வி கேட்கப்படாது. கேட்டால் தெய்வ குற்றம் ஆகிவிடும்.

அந்த கிளிக்குட்டி(!) எப்படி இருந்ததாம்?... தலையெல்லாம் கிளிபோல இருந்ததாம். உடல் மட்டும் மனுஷ்ய பாவணையாய் அமைந்ததாம். என்னடா இது புதுக் கொடுமையாக இருக்கிறதே என்கிறீர்களா?... இது பழம்பெரும் ‘கொடுமை’.
இதை உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கதானே செய்கிறது.

இந்த கிளிக்குட்டிதான் சுகர்.

“எம்ப்ரவ் விஷந்தம்அனுபேதம் உபதே ஹிருத்யம்தனவ பாயஹைவிரக காதரஹ ஆஹிஜாகாதேதீ தன்மயேதய தரவோ...”

#Share_This

#அர்த்தமுள்ள_ஆரிய_இந்துமதம்

-வேணு கோபாள சங்கர்- ஆறாம் அறிவு, முகநூல் பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக