வியாழன், 14 மே, 2020

லட்சுமி

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

லட்சுமி:

ரம்பன் என்பவருக்கு ஒரு எருமை மாடு மனைவியாக இருந்தது. இந்த இருவருக்கும் பிறந்தவர் தான் 
மகிஷன் என்கிற அரசர். 

இந்த மகிஷன் தேவர்களை தொல்லைப்படுத்தி வந்தார். தேவர்கள் கூட்டம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிடம் முறையிட்டது.

மும்மூர்த்திகளும் அளவற்ற கோபமடைந்து அக்னியாய் தகித்தனர். இக் கோபத்தின் ஒளிப்பிழம்பில் உருவான உயிரே கடவுள் லட்சுமி. 

இந்த லட்சுமி கடவுள் அரசர் மகிஷனை மாய்த்தார். தேவர்களுக்கு உண்டான தொல்லையை நீக்கினார். 

மகிஷா சுரமர்த்தினி, தேவி, லட்சுமி, மகாலட்சுமி என்று பூஜிக்கப்படும் தெய்வமும் இவர் தான்! 

இந்த லட்சுமிதான் ஒரு பிறப்பில் சீதையாக இருந்தவர்.

(ஆதாரம்: தேவி பாகவதம்)

- வி.சி.வில்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக