வியாழன், 14 மே, 2020

விஷ்ணு

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

விஷ்ணு:

பிரம்மனைப் போலவே விஷ்ணு கடவுளுக்கும் 3 மனைவிகள்.  
இலட்சுமி, பூதேவி, நீலாதேவி.

ஏனைய கடவுள்களை விட விசேசமானவர் இவர். ஒவ்வொரு யுகத்திலும் ஒரு அவதாரம் எடுப்பார்.

இதுவரை 10 அவதாரங்கள் எடுத்துள்ளார்.  

மச்சாவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம். பரசுராம அவதாரம், ராம அவதாரம் , பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் முதலியவை இவர் எடுத்த குறிப்பிடத்தக்க அவதாரங்கள்.

அடிக்கடி மாறுவேடம் போடுவார் விஷ்ணு. அதுவும் பெண் வேடம் என்றால் பெரும் விருப்பம்!  

மகாவிஷ்ணு தனது பக்தர்களுக்குச் அமிர்தத்தைப் பகிர்ந்துக் கொடுக்க மோகினி வேடம் எடுத்தார். அப்போது அசுரர்களின் அணைப்பிற்கு ஆளானார். 

விஷ்ணுவின் பெண் வேடத்தைப் பார்த்த சிவன் அதில் மயங்கிப் போனார். அவ்வளவு தான் நடக்க வேண்டியது நடந்தது! 

இந்நிலையில் பிறந்தவர் தான் "ஹரிஹரன்" என்கிற ஐயப்பன் கடவுள்.
- வி.சி.வில்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக