வியாழன், 18 ஜனவரி, 2018

அய்யய்ய... அருவருப்பின் மறுபெயர்தான் பக்தியா? எச்சில் இலைகளில் உருண்டு பெண்கள் நேர்த்திக் கடனாம்



ஈரோடு, ஜன.11 சேஷாத்ரி சுவாமிகளின், ஆராதனை விழாவின் இறுதி நாளான நேற்று, பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மீது, பெண்கள் உருண்டு, நேர்த்திக் கடன் செலுத்தினராம்.

ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் காவிரியாற்றின் கரையில், திருவண்ணாமலையில் வாழ்ந்த, சேஷாத்ரி சுவாமி களின் சமாதி உள்ளதாம். ஆண்டுதோறும் ஜனவரியில், ஆறு நாட்கள் ஆராதனை விழா  நடைபெறும். இந்தாண்டு ஆரா தனை விழா, 5ஆம் தேதி, தனுர் மாத பூஜையுடன் துவங் கியதாம்.  உள்ளூர் மட்டுமின்றி சென்னை, மும்பை, மதுரை, கோவை, பெங்களூரு, அய்தரா பாத், புனே உள்ளிட்ட பல் வேறு நகரங்களில் இருந்தும், பக்தர்கள் குடும்பத்துடன் வந் திருந்தனராம். இரவு ஏழு மணி முதல், நாம சங்கீத கீர்த் தனை, பக்தி இன்னிசை, கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடந்தன.

ஆராதனையின் கடைசி நாளான, நேற்று (10.1.2018) காலை, 11 மணிக்கு, சேஷாத்ரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்ததாம். விழா வில் பங்கேற்ற பக்தர்களுக்கு, இலவச சோறு போடப்பட்ட தாம். விழாவில் பங்கேற்ற பெண்கள், பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மீது உருண்டு, நேர்த்திக்கடன் செலுத்தி, இலை களை தலையில் சுமந்து, காவிரியில் போய் குளித்தார்களாம்.
- விடுதலை நாளேடு, 11.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக