ஞாயிறு, 15 நவம்பர், 2015

யாகத்தில் பொசுக்கி பசுக் கறியைத் தின்றவர்கள்தான் பார்ப்பனர்கள்

யாகத்தில் பொசுக்கி பசுக் கறியைத் தின்றவர்கள்தான் பார்ப்பனர்கள்
தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் திராவிடர் விழிப்புணர்வு வட்டாரமாநாட்டில் கழக துணைத் தலைவர் உரை
சென்னைமார்ச் 20_சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் தென்சென்னைமாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 14.3.2015 அன்று திராவிடர் விழிப்புணர்வு வட்டாரமாநாடு பொறியாளர் மயிலை .குமார் தலைமையில் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மு.சண்முகப் பிரியன் வரவேற்றார்.தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்மாவட்டச் செயலாளர்செ.இரா.பார்த்தசாரதிமாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவீ.இராகவன்,அரும்பாக்கம் சா.தாமோதரன் முன்னிலை வகித்தனர்.
வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் தொடக்க உரைஆற்றினார்.
தென்சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன்சென்னைமண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர்மணியம்மைபெரியார் சட்ட உதவிமய்ய அமைப்பாளர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,
சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் தமிழ்சாக்ரடீஸ்பிரச்சாரச் செயலாளர்வழக்குரைஞர் .அருள்மொழி ஆகியோர் உரைக்குப் பின்னர் மாநாட்டு சிறப்புரையாகதிராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
வழக்குரைஞர் அருள்மொழி பேசும்போதுஇந்தி யாவில் உள்ள மக்களின் வாழ்க்கைஎப்படி இருக் கிறதுஇந்தியாவைப்பற்றி உலக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய நேரத்திலேநம் நாட்டில்நினைக்கிற கருத்தைப் பேசலாமாகூடாதா?
அந்தக் கருத்துகளை தொலைக்காட்சியில் வருவதற்குஅதை ஒளிபரப்புவதற்கு உரிமைஇருக்கிறதாஇல்லையாஇதைவைத்து ஒருவாரமாக தமிழ்நாட்டில் செய்திகள்ஓடிக்கொண்டு இருக்கின்றனஇதுகுறித்து நாடாளு மன்றத்தில் பேசப்படுகிறது.  இல்லைநாங்கள் இதை யெல்லாம் அனுமதிக்கமாட்டோம் என்கிறார்கள்இதை ஆதரிக்கவில்லை,கண்டிக்கிறோம் என்கிறார்கள்.
இங்கிலாந்திலிருந்து பிபிசி எடுத்து வெளியிட் டுள்ள இந்தியாவின் மகள் ஆவணப்படத்தில் தூக் குக்கயிறை எதிர்நோக்கி உள்ள கைதியின் பேட்டியை அரசின்அனுமதிபெற்றே எடுத்து வெளியிட்டுள்ளதுஅதில் கைதியாக உள்ள முகேஷ் என்பவன்கூறியுள்ள கருத்தில் ஆணாதிக்க மனப்பான்மையே இருக்கிறதுஅதே கருத்துதான்ஆர்.எஸ்.எஸ்தலைவர் மோகன் பகவத் கருத்தாகவும் உள்ளது.
_இவ்வாறு பிரச்சாரச் செயலாளர் .அருள்மொழி உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:
இப்போது நிலைமை என்னவென்றால்ஆட்டைக் கடித்துமாட்டைக்கடித்துமனிதனைக்கடித்து என்று சொல்வார்கள்இப்போது ஏற்பட்டிருக்கிற மதவெறிகாவி வெறிஇந்துவெறி எந்த அளவிற்கு இன் றைக்குத் தலைவிரித்து ஆடுகிறது என்று சொன்னால்,இன்றைக்கு இரவு நம் வீட்டில் என்ன குழம்பு வைக்கவேண்டும் என்பதைஇராம.கோபாலனைக் கேட்டுத்தான் செய்யவேண்டும்.
நாளைக்கு மதியம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை இல.கணே சனைக் கேட்டுத்தான்முடிவு செய்ய வேண்டும்இப்படி ஒரு அராஜகமானஎந்த நாட்டிலும் கேள் விப்படாததைஇந்துத்துவாவாதிகள் சொல்கிறார்கள்.
அதுதான் பசுவதைத் தடுப்புபசுவின் கறியை சாப் பிடக் கூடாதுமகாராட்டிரமாநிலத்திலே சட்டம் போட்டது மட்டுமல்லாமல்இந்த சட்டத்தை இந் தியா முழுமையும்கொண்டுவருவதற்கு ஓர் ஏற்பாடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
பசுவதைத் தடையா?
மாநில அரசினுடைய கருத்துகளையெல்லாம் கேட்டுஅதனடிப்படையில் இப்படி ஒருசட்டம் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண் டிருக்கிறார்கள்இப்படி ஒருசெய்தியை வெளிநாட் டில் இருப்பவர்கள் கேள்விப்பட்டால் வாயாலேயே சிரிக்கமாட்டார்கள்இந்துமதவெறிஏதோ மத்தியிலே ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்கிற திமிர்.
பத்து ஆண்டுகள் மத்தியிலே காங்கிரசு ஆட்சி இருந் ததுஅவர்கள் செய்த சிலதவறுகளின் காரணமாக அந்த இடத்திலே போய் உட்கார வைத்தார்களே தவிர,இந்துத்துவாமீது அபரிதமான ஆர்வம் மக்களுக்குப் பெருக்கெடுத்து ஓடி இவர்களைஆட்சிக்கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால் அதைவிட படுமுட்டாள்தனம் உலகத் திலே வேறு எதுவும் இருக்க முடியாது.
நாள் ஒன்றுக்கு ரூபாய் 20 சம்பாதிக்கக்கூடியவர்கள்இந் தியாவிலே 77 விழுக்காடுஇருப்பதாகச் சொல்லு கிறார்கள்இரவு சாப்பாடு இல்லாமல் தூங்குபவர்கள்இந்தியாவிலே 70 கோடி பேர் இருப்பதாகச் சொல்லு கிறார்கள்ஓர் அரசு என்றால்,இதுபற்றித்தான் கவலைப்பட வேண்டும்.
வெறும் 20 ரூபாயில் எப்படி ஒரு நாள் பொழுதைக் கழிக்க முடியும்இந்தியாசுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனதற்குப் பின்னாலேஇரவு சாப்பாடுஇல்லாமல் வயிற்றைப்பிசைந்துகொண்டு ஏழை எளிய மக்கள் இன்றைக்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்களேஇதற்கு என்ன திட்டம் போடுவது?
மக்களுடைய அடிப் படைத் தேவையான இருக்க இடம்உண்ண உணவுஉடுக்க உடைஇந்த அத்தியவசியமான பொருளை மக்களுக்கு எப்படி உறுதிப்படுத்துவதுஇதைப்பற்றிஓர் அரசு சிந்தித்தால்திட்டமிட்டால்அது நல்லரசு என்று சொல்லலாம்.
இன்று இரவு என்ன சாப்பிடுவதுநாளை மதியம் எதைச் சாப்பிடக்கூடாது என்றுசட்டாம்பிள்ளைத் தனமாக தனக்குக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப்பயன்படுத்தக்கூடிய ஒரு கூட்டம் நாட்டிலே புறப்பட்டிருக்கிறது.
இந்தியக் கோமாதா கறப்பது என்ன?
இந்தியாவில் இருக்கும் பசுக்கள் கோமாதா என்று சொல்கிறார்களேஒரு நாளைக்குசராசரியாக 2.19 கிலோ கிராம் அளவில்தான் பால் கறக்கிறதுஇந்திய கோமாதா பாலைக்கறக்கவில்லைநம்முடைய பணத் தைத்தான் கறக்கிறது.
கோமாதாவைப் பராமரிக்க வேண்டும் என்றால் நாம்தான் செலவு செய்யவேண் டும்.ஆனால்வெளியாடுகளில் கனடாடென்மார்க் அந்த நாடுகளில் அவன் கோமாதா என்றுசொல்வதில்லை. 75 லிட்டர் பால் கறக்கும் மாடுகளை அந்த நாடுகளில் கோமாதா என்றுசொல்வதில்லை.
செயற்கைக் கருவூட்டலில் எந்த விந்து?
பசுமாட்டைக் கருத்தரிக்க என்ன செய்கிறீர்கள்கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுபோகி றீர்கள்செயற்கை முறையில் கருத்தரித்தல்அதில் எந்தக் காளையின் விந்தைப்போடுகிறார்கள் தெரியுமாஇந்தியாவில் உள்ள காளைமாடுகளின் விந்துக்களைச்சேர்ப்பதில்லைவெளிநாட்டு காளைகளின் விந்தைத்தான் சேர்க்கிறார்கள்.
நாள் ஒன்றுக்கு 75 லிட்டர் கறக்கக்கூடிய வெளிநாட்டு பெர்சியன்ஜெர்சி   முதலியகாளைகளின் சினை முட்டைகளை கோமாதாவுக்குள்ளே செலுத்தி கருத் தரிக்கச்செய்கிறார்கள்கோமாதா கற்பு என்னாயிற்று?
அவர்களின் மிலேச்சப் பசுக்களின் விந்தணுக்களை கோமாதாவுக்குள் செலுத்திசெயற்கைக் கருத்தரித்தல் செய்கிறார்கள்.  கோமாதா கோமாதா என்கிறார் களே?கோயில்களில் நேர்த்திக்கடன் என்று பசுமாடு களை விடுகிறார்கள்அப்படி விடப்படும்பசுக்களை கோயில் நிர்வாகம் சரியாகப் பராமரிப்பதில்லை.
அதைத் திருட்டுத்தனமாக கசாப்புக்கடைக்கு அனுப்புகிறார்கள்பத்திரிகைகளில்செய்திகள் வந்தன.கோயிலுக்கு விடப் பட்ட பசுக்களையே கசாப்புக்கடைக்குக் கொண்டுசெல்கிறார்கள்உலகில் அதிகமாக மக்கள் சாப்பிடக் கூடிய உணவு ஒன்று என்றால்அதுமாட்டுக்கறி தான்சத்துள்ள உணவுஆட்டுக்கறியைவிட பாதி விலையில் கிடைக்கின்றமாட்டுக்கறியை அரசே சாப் பிடச் சொல்லவேண்டும்.
ஆனால்அரசு என்ன செய்கிறதுபார்ப்பனர்கள் மாட்டுக்கறியை சாப் பிட்டதேஇல்லையாபசு புனிதம் என்கிறார்களேபுராணங்கள்இதிகாசங்களில் பார்ப்பனர்கள்எப்படி யாகம் நடத்தினார்கள்பசு மாட்டை நெருப்பில் போட்டுக் கொளுத்திஎப்படிச்சமைத்து எப்படி சாப்பிடுவது என்று கூறப்பட்டுள்ளதேஎங்களிடம் ஆதாரம் உள்ளது.
பசுக்கறியைப் பார்ப்பனர்கள் சாப்பிட்ட விதம்
பசு மாட்டை யாகத்திலே கொன்று எப்படி சாப்பிடுவது என்று பார்ப்பனர்களுடையஇதிகாசத் திலே சொல்லி இருக்கிறார்கள்மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையைஅறுத்தெடுக்க வேண் டும்பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்கவேண்டும்முன் கால்களிலிருந்து அஃகு வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்கவேண்டும்.
அவ்வாறு அதே இடங்களிலிருந்து 26 துண்டுகளை அறுத்தெடுத்தபின்எல்லாவற்றையும்அறுத்தெடுத்துக் கொள்கஅப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
மாட்டைக் கொல்லும்போது நன்றாக அடித்துக் கொல்கொல்!! என்று சத்தம்போடவேண்டும்அந்த மாட்டை அடிக்கும்போது நன்றாக அடி அடி என்று சத்தம்போடவேண்டும்இப்படியெல்லாம் புரா ணத்திலேஇதிகாசத்திலே எழுதிவைத்திருக்கிறார் கள்இப்போது இந்துக்களின் புனிதம் என்று சொல்கிறாயேஇந்துமதத்திலே இருப்பதை ஏன் மாற்றிப் பேசுகிறாய்நாங்கள் எடுத்துச் சொல்லும் போதுஉனக்கு ஏன் கோபம் வருகிறது?
பார்ப்பனர்கள் மாமிச உணவை எப்போது விட் டார்கள் என்பதற்கு வரலாறு இருக்கிறது.புத்தர் காலத்திற்குமுன்வரை பார்ப்பனர்கள் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.கவுதம புத்தர் தோன்றிஇந்தப் பார்ப்பன யாகங்களை எதிர்த்துநெருப்பில் போட்டுபொசுக்குகின்ற அந்த யாகங்களைத் தடுத்து நிறுத்தி மக்கள் மத்தியிலே வைதீகஆரிய,பார்ப்பன எதிர்ப்பை உண்டாக்கி,
மக்கள் பவுத்த மதத்துக்கு மாறும் சூழ்நிலையில்பார்ப்பனர்கள் தங்கள் மதத் தைக்காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக சைவத்துக்கு மாறினார்கள்இதுதான்வரலாறுஇதை நாங்கள் சொல்லவில்லைராகுலசாங்கித்யாயன் என்கிறஉலகப்புகழ்பெற்றமிகப்பெரிய வரலாற்றுப் பேராசிரியர் எடுத்துக்கூறியுள்ளார்.
பார்ப்பனர்கள் இதற்கப்புறம்தான் பசு மாட்டுக் கறியை உண்ணக்கூடாது என்றுகொண்டுவந்தார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்சிறப்புரையில் உரை யாற்றும்போது குறிப்பிட்டார்.
கலந்துகொண்டவர்கள்
மயிலை சேதுராமன்வழக்குரைஞர்கள் .வீரமர்த் தினி.விவேகானந்தன்,.வீ.அருள்மொழி.பால முரளிசரவணன்மு.பவானிவி.வளர்மதி.அரவிந்த்,அய்ஸ்அவுஸ் சேது.துணைவேந்தன்சந்தோஷ்யாழ்ஒளிதங்கமணிதிருவொற்றியூர்கணேசன்சுமதிகூடுவாஞ்சேரி ராசுமதுரவாயல் தங்க.சரவணன்அம் பத்தூர்பூ.இராமலிங்கம்கோவிந்தராசன்இளை ஞரணி மகேந்திரன்,
மு.முகிலன்மணிதுரைஎம்இரமேஷ்ஜெயப்பிரகாஷ்சிவக்குமார்,  இசையின்பன்,பசும்பொன்கலையரசன்சவுந்தரராஜன்பெரியார் பிஞ்சுகள் அபினா சுருதிகோவன்சித்தார்த்அசுரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-விடுதலை,20.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக