ஞாயிறு, 22 நவம்பர், 2015

நூல் - சிகை -யறுத்தல் நன்றே!



நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ?
நூலது வேதாந்தம்:
நுண்சிகை ஞானமாம்
குடுமி, மயிர்; பூணூல், பருத்தி மயிரும் பருத்தியுமே இறையறிவிற்கு இலக்கணமாகுமா? ஆகா. ஒழுக்கமில்லா வேடம் போலித்தனமாகும். வாழும் வேதாந்தத்தால் அவாவறுத்தலே பூணூலாகும். கடவுளறிவே சிகையாகும்.
நெஞ்சில் மடைமையிருள் குடி கொண்டு சிறை வைத்துப் பூணூலும் போட்டு நான் பிராமணன் என்று பொய்வேடம் பூணூவோரால் நாடு கெடும், புவிவளம் குறையும். பெரு வாழ்வும், அரசும் பெருமையிழக்கும். ஆதலால் அந்த ஆடம்பரப் போலிகளின் பூணூலையும், சிகையையும் அரசன் அறுத்தெறிதல் நன்றாகும்; ஞான நூல் பூண்டு அந்தன் ஞானிகள் எனவும் நடித்து உலகை ஏமாற்றுவர்.
அரசன் மெய்ஞ்ஞானிகளைக் கொண்டு அவர்களை சோதித்து; ஞானமுண்டாக்கி நல்வழிப்படுத்த வேண்டும். அதுவே நாட்டிற்கு நல்லதாகும்.            (பக்கம் 100)
ஞான மிலாதார் சடை சிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை
ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞான முண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே
- யோகி தவத்திரு. சுத்தானந்த பாரதியார்,  நூல்: திருமந்திர விளக்கம்,. (முதற்பாகம்), கழக வெளியீடு, தகவல்: குன்றவாணன்
-விடுதலை,18.1.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக