திங்கள், 18 டிசம்பர், 2017

ஆண்டாளின் காம திருப்பாவை

ஆண்டாளின் காம திருப்பாவை மார்கழி மாத குளிருக்கு - கேவலங்கெட்ட இந்து மதம்..

மார்கழி வந்துவிட்டது. வைணவர்கள் திருப்பாவை என்ற ஆண்டாளின் பாடல்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தினமணி, தினமலர், போன்ற நாளேடுகள் நாள் தோறும் திருப்பாவையிலிருந்து ஒரு பாடலை வெளியிட்டும் வருகின்றன.

திருப்பாவையில் 30 பாடல்கள் உள்ளதால் ஒரு மாத காலத்திற்குச் சரியாகவே பொருந்திவிடுகிறது.
திருவில்லிப்புத்தூர் கோயிலில் உள்ள பெருமாளை பிஞ்சிலேயே பழுத்து தம் கணவனாகக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் வெளிவந்த பாடல்களாக அமைந்துள்ளன.

ஆண்டாள் காமம் கொண்டு கண்ணனைப் பார்த்து பாடும் பாடல்கள்.

‘அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்…’ என்கிறாள்.

பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள் ஆண்டாள்.

‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் தரணியில் தலை புகழ் தரக்கற்றியே'

ஆண்டாளுக்குதான் என்ன ஆசை . மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்!
உடனே நம்ம ஒழுக்க வாதிகள்..”அட..அவுய்ங்க பக்தியால தடவ சொல்றாங்கப்பா” என இழுக்கலாம். அப்படியானால் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.

‘பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்…
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ’

கடவுளுடன் உடல் உறவு கொள்ள வேண்டுமாம் ஆண்டாளுக்கு. அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று ஆண்டாள் கேட்கிறாள்.

இதுதான் திருப்பாவை. கண்ணன் கோவில்களில் இந்த மதம் முழுவதும் இதை தான் பாடுவார்கள்.

இந்த sex songs பாடுறதுக்குத்தான் காலைல 4.30 எந்திச்சி குளிச்சி பக்தி பழமா கோவிலுக்கு கிளம்பி போறாங்க..
-டக்லசு முத்துக்குமார், முகநூல் பதிவு, 19.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக