புதன், 2 டிசம்பர், 2015

தீயில் நடக்கலாம்


முகமதியர் தமது நோன்பிலே, பெருந்தீயில் இறங்கிச் செல்கின்றனர். இது தெய்வத் திருவருளா! அல்லது ஏதேனும் சூழ்ச்சியினாலா? என்றால், அருளும் அன்று! சூழ்ச்சியும் அன்று, முகமதியர் மட்டும் அல்லர்.
இந்துக்களும் திரவுபதை கோயில், முருகக்கடவுள் கோயில் முதலிய இடங்களில் தீயில் இறங்கிச் செல்கின்றனர். தீ அவர்களைச் சுடுவதில்லை. இது தெய்வச் செயல் என்று நீங்கள் எண்ணுதல் வேண்டா.
கையால் தீயை எடுக்கலாம். ஆனால் அதனை வைத்துக் கொண்டிருக்க முடியாது. கை ஒரு மாத்திரை நேரம் அளவு சூட்டைப் பொறுக்கும் காலில் தீயின் வெம்மை சிறிது நேரம் தாழ்ந்தே சுடுமாதலின் அஃது இரண்டு மாத்திரை சூடு பொறுக்கும். தீயில் நடந்து செல்லலாம்.
தீயின் சாம்பல் காலில் ஒட்டிக் கொண்டால் சுடும். தீயில் சாம்பல் உண்டாகாமல் பாதுகாத்து நடப்பின் சுடாதிருக்கும்.
- பாம்பன் குமரகுருதாச அடிகள் (1878 ஆம் ஆண்டில்)


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக