சனி, 3 நவம்பர், 2018

கிறித்தவ பெண்ணின் மரண தண்டனை ரத்து

போராட்டக்காரர்களுக்கு பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை




இசுலாமாபாத், அக். 2- பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறித்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற் பட்ட தகராறின்போது முகம் மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

இதில் அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ஆம் ஆண்டு விசாரணை நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபி, தனது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்மூறை யீடு செய்திருந்தார். இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

மரண தண்டனையிலிருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இசுலாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இசுலாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களி லும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத அவம திப்பு வழக்கில் விடுவிக்கப் பட்ட கிறித்தவ பெண்ணுக்கு எதிராக போராடுபவர்களை, மாநில அரசுடன் மோத வேண் டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுக்கு எதிரான நடவடிக்கை யில் யாரும் ஈடுபட வேண்டாம். நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண் டுமே அன்றி மீறக்கூடாது. இது விஷயமாக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

- விடுதலை நாளேடு, 2.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக